NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி - இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி - இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி - இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி - இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    எழுதியவர் Nivetha P
    Feb 04, 2023
    04:14 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்து நாட்டில் நீண்ட கால ராணியாக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர் 2ம் எலிசபத் ஆவார்.

    தனது 94 வயதில் கடந்த 2022ம்ஆண்டு செப்டம்பர் 8ம்தேதியன்று இவர் உடல்நல குறைவால் காலமானார்.

    இதற்கிடையே, 2021ம்ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையன்று ராணி எலிசபத்'தை கொள்வதற்காக ஒரு இளைஞர் அரசு இல்லத்திற்குள் புகுந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    அவரை கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார்கள்.

    விசாரணையில் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஜஸ்வந்த் சிங் சைல் என்பதும் தெரிய வந்துள்ளது.

    சம்பவம் நடந்த ஆண்டு அவருக்கு வயது 19, மேலும் அவர் ராணியை கொலை செய்யும் நோக்கத்துடன் தான் உள்ளே வந்ததாக ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளார்.

    தேசத்துரோக வழக்குப்பதிவு

    பழிவாங்கும் நோக்குடன் மேற்கொண்ட கொலை முயற்சி

    மேலும் அதற்காக அவர் வில் அம்பு வடிவிலான ஆயுதம் ஒன்றினை உடன் எடுத்துவந்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர் எதற்காக ராணியை கொல்ல முயற்சி செய்தார் என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து மனநல சிகிச்சைக்காக பிராட்மூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் தான்செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் இந்த கொலை முயற்சி சம்பவத்திற்கு முன்னர் அந்த இளைஞர் வீடியோ ஒன்றினை பலருக்கும் அனுப்பியுள்ளார்.

    அதன் மூலம், இந்தியாவில் 1919ம்ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்ட அனைத்து இந்தியர்களுக்காகவும், பழி வாங்குவதற்காக இச்செயலை செய்தது தெரியவந்துள்ளது.

    தற்போது அவர் மீது 1842ன் ஆண்டு தேசத்துரோக சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    இங்கிலாந்து

    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்
    கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம் உலக செய்திகள்
    இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சை: இளவரசர் ஹாரி தாக்கப்பட்டாரா?! உலகம்
    மனிதர்களின் உயிர் உங்களுக்கு பகடைக்காயா?! இளவரசர் ஹாரியை விமர்சிக்கும் தாலிபான்! உலகம்

    இந்தியா

    யூனியன் பட்ஜெட் 2023; பொருளாதாரத்தில் இந்திய 5வது பெரிய நாடாக உள்ளது; பட்ஜெட் 2023
    பட்ஜெட் தாக்கல் 2023: பழைய வாகனங்களை அகற்ற அரசு சார்பில் நிதியுதவி! ஆட்டோமொபைல்
    மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள் மத்திய அரசு
    அட்டகாசமான லுக்கில் போக்கோ X5 ப்ரோ மாடல் வெளியீடு! எப்போது கிடைக்கும்? ஸ்மார்ட்போன்

    உலகம்

    Gen Z டேட்டிங் அறிவுரை: உங்கள் உறவுமுறையில், கவனத்தில் கொள்ள வேண்டிய சில சிமிஞ்சைகள் மன ஆரோக்கியம்
    கூகுளில் 12 ஆயிரம் பேர் பணி நீக்கம்! ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை உருக்கம்; கூகுள்
    இளைஞர்கள் எதிர்காலத்தை திட்டமிடக்கூடாது! ஊபர் CEO தாரா கோஸ்ரோஷாஹி அட்வைஸ் தொழில்நுட்பம்
    நேபாளத்தில் இந்தியா நடத்தும் இசை திருவிழா: இருநாட்டு உறவின் 75வது ஆண்டு கொண்டாட்டம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025