NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி: ரணில் விக்கிரமசிங்கே
    அடுத்த செய்திக் கட்டுரை
    இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி: ரணில் விக்கிரமசிங்கே
    அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என நம்புகிறோம்: விக்கிரமசிங்கே

    இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி: ரணில் விக்கிரமசிங்கே

    எழுதியவர் Sindhuja SM
    Jan 17, 2023
    03:10 pm

    செய்தி முன்னோட்டம்

    இலங்கை தமிழர்களுக்கு நிச்சயம் அதிகார பகிர்வு வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருக்கிறார்.

    இலங்கை அரசாங்கம் 13வது திருத்தத்தை "முழுமையாக அமுல்படுத்தும்" என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை(ஜன:15) தெரிவித்தார்.

    இதே போன்ற விஷயங்களுக்கு ஏற்கனவே வாக்குறுதிகள் வழங்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    2015ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கே தி ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதே போன்ற வாக்குறுதியை வழங்கி இருக்கிறார்.

    "அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என நம்புகிறோம். வடக்கில் மட்டுமல்ல, தெற்கிலும், முதலமைச்சர்கள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருகிறார்கள்,"என்று விக்கிரமசிங்கே, இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வில் நேற்று முன்தினம் பேசினார்.

    ரணில் விக்கிரமசிங்கே

    13வது சட்ட திருத்தம் என்றால் என்ன?

    1987இல் இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்து, இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இலங்கை அரசியலமைப்பில் 13வது திருத்தம் சேர்க்கப்பட்டது.

    அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் இலங்கையின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனே ஆகியோர் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம், தனிநாடுக்காகப் போராடிக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே வளர்ந்த இனக்கலவரத்தைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.

    நாட்டில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    இது சிங்கள பெரும்பான்மை பகுதிகள் உட்பட நாட்டை 9-மாகாணங்களாகப் பிரித்து அந்த மாகாணங்களுக்கு சுயமாக ஆட்சி செய்யும் திறனை வழங்குகிறது.

    ஆனால், பெரும்பாலான சிங்கள கட்சிகள் அதிகாரங்களைப் பகிர்வதை கடுமையாக எதிர்க்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    உலகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கைத் தமிழர்கள்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    உலகம்

    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம் அரசு திட்டங்கள்
    'இனி குழந்தைகள் வேண்டாம்' - 102 குழந்தைகளின் தந்தை முடிவு உலக செய்திகள்
    இந்தியர்களிடம் 10 பில்லியன் டாலர்களை இழந்த அமெரிக்கா! அமெரிக்கா
    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025