Page Loader
WTC Final 2023 : இரண்டு மைதானங்களை தயார் செய்துள்ள ஐசிசி! லண்டன் போராட்டத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
இரண்டு மைதானங்களை தயார் செய்துள்ள ஐசிசி

WTC Final 2023 : இரண்டு மைதானங்களை தயார் செய்துள்ள ஐசிசி! லண்டன் போராட்டத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 07, 2023
02:41 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இரண்டு பிட்ச்களை தயார் செய்துள்ளது. போட்டியின் போது ஆடுகளத்தையும் மைதானத்தையும் சேதப்படுத்துவதாக எண்ணெய் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாற்று ஆடுகளத்தை உருவாக்கும் பிளேயிங் கண்டிஷன் விதியின் பிரிவு 6.4 இல் ஐசிசி மாற்றங்களைச் செய்துள்ளது. மேலும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு கென்னிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் தடைபட்டால், அவர்கள் ஆடுகளத்தை மதிப்பீடு செய்து, அது விளையாடுவதற்கு நல்ல நிலையில் உள்ளதா இல்லையா என்று ஆராயப்படும். நல்ல நிலையில் இருந்தால் அதே ஆடுகளத்திலும், இல்லையென்றால் மற்றொரு பிட்சிலும் விளையாடப்படும்.

ICC Playing Condition rule

ஐசிசியின் பிளெயிங் கண்டிஷன் விதிகளில் உள்ளது என்ன?

போட்டியை ஆடுகளத்தில் தொடர்ந்து விளையாடுவது பாதுகாப்பற்றது அல்லது நியாயமற்றது என்று கள நடுவர்கள் தீர்மானித்தால், அவர்கள் ஆட்டத்தை நிறுத்திவிட்டு உடனடியாக ஐசிசி மேட்ச் ரெஃப்ரிக்கு 6.4.1 இன் கீழ் தெரிவிக்க வேண்டும். 6.4.4 இன் கீழ், ஆட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டாம் என்று முடிவெடுத்தால், ஐசிசி மேட்ச் ரெஃப்ரியுடன் கலந்தாலோசித்து, இருக்கும் ஆடுகளத்தை சரிசெய்து, போட்டியை நிறுத்திய இடத்தில் இருந்து போட்டியை மீண்டும் தொடங்க முடியுமா என்பதை கள நடுவர்கள் ஆராய்வார்கள். 6.4.7 இன் கீழ், மேலே குறிப்பிட்டுள்ள முடிவெடுக்கும் செயல்முறைகள் முழுவதும், ஐசிசி மேட்ச் ரெஃப்ரி, கேப்டன்கள் மற்றும் மைதான அதிகாரத்தின் தலைவருக்கு நிலைமை குறித்து தெரிவிக்க வேண்டும்.