NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்தாலும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற பருல் சவுத்ரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்தாலும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற பருல் சவுத்ரி
    இந்திய தடகள வீராங்கனை பருல் சவுத்ரி 3000 மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்

    உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்தாலும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற பருல் சவுத்ரி

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 28, 2023
    07:54 am

    செய்தி முன்னோட்டம்

    ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்த தடகள உலக சாம்பியன்ஷிப் 3000 மீ ஸ்டீபிள்சேஸின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பருல் சவுத்ரி 11வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார்.

    முன்னதாக, மகளிருக்கான 3000 மீ ஸ்டீபிள்சேஸில் 2023 உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை பருல் சவுத்ரி ஏற்கனவே படைத்திருந்தார்.

    மேலும், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் டிராக் நிகழ்வின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற இரண்டாவது இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

    இந்நிலையில், இறுதிப்போட்டியில் உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுடன் போட்டியிட்ட பருல் சவுத்ரி 9:15:31 நிமிடத்தில் இலக்கை எட்டி போட்டியில் 11வது இடத்தை பிடித்தார்.

    parul chaudhary qualifies for paris olympic

    2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி

    போட்டியில் 11வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தாலும், 9:15:31 நிமிடங்களில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார்.

    மேலும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கு பெறுவதற்கான தகுதி நேரமான 9.23 நிமிடங்களை விட குறைவான நேரத்தில் இலக்கை எட்டி, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் மீரட் அருகே உள்ள இக்லௌடா கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகள் என்ற எளிய பின்னணியைக் கொண்ட பருல் சவுத்ரி, தனது விடா முயற்சி மூலம் 3000 மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தொடர்ந்து முன்னேறி வந்துள்ளார்.

    தற்போது உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மற்றும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றதன் மூலம் ஸ்டீபிள்சேஸ் துறையில் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக சாம்பியன்ஷிப்
    தடகள போட்டி
    ஒலிம்பிக்
    இந்தியா

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    உலக சாம்பியன்ஷிப்

    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தங்கம் வில்வித்தை
    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வில்வித்தை
    சென்னையில் நடந்த பைக் ரேஸில் விபத்து; 13 வயது வீரர் ஷ்ரேயாஸ் ஹரீஷ் மரணம் சென்னை
    யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக் மல்யுத்தம்

    தடகள போட்டி

    சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் செல்வ பி திருமாறன்! இந்தியா
    சர்வதேச தடகள போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் இந்தியா
    ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய தடகள வீரர் கார்த்திக் குமார் இந்தியா
    தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி தமிழ்நாடு செய்தி

    ஒலிம்பிக்

    பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்கள் தகுதி விளையாட்டு
    பாரிஸ் ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட தகுதிப் போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்கு தடை உலக கோப்பை
    தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி! மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்! மத்திய அரசு
    'ஐபிஎல்லில் விளையாடுவேன்' : ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஜாலி பேட்டி ஐபிஎல்

    இந்தியா

    'உலகின் மிக முக்கியமான நாடு இந்தியா தான்': அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  அமெரிக்கா
    இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கு ஆன செலவு எவ்வளவு? சந்திரயான்
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு: மத்திய அரசு  மத்திய அரசு
    இந்தியாவில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025