NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி
    நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி
    1/2
    விளையாட்டு 1 நிமிட வாசிப்பு

    நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 25, 2023
    06:24 pm
    நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி
    நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி

    வெள்ளியன்று (ஆகஸ்ட் 25) நடந்த தடகள உலக சாம்பியன்ஷிப் 2023 இன் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் மூன்று பேர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக, குழு ஏ'வில் இடம் பெற்றுள்ள நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரத்திற்கு எறிந்து இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். மேலும், 2024 ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கு தூரத்தையும் தாண்டியதால், ஒலிம்பிக்கில் போட்டியிடவும் தகுதி பெற்றுள்ளார். இதற்கிடையே, மேலும் இரண்டு வீரர்களும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதன் மூலம் முதன்முறையாக 3 ஈட்டி எறிதல் வீரர்கள் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    2/2

    இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்கள்

    இந்திய வீரர் டிபி மினு நீரஜ் சோப்ராவுடன் குழு ஏவில் போட்டியிட்டு அதிகபட்சமாக 81.31மீ எறிந்து குழுவில் மூன்றாவது இடத்தையும் ஒட்டுமொத்தமாக ஆறாவது இடத்தையும் பெற்றார். இதேபோல் கிஷோர் ஜெனா குழு பி பிரிவில் 80.55 மீ எறிந்து ஒட்டுமொத்தமாக ஒன்பதாவது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த போட்டியின் விதிப்படி 83மீ தூரத்திற்கு ஈட்டி எறியும் வீரர்கள் நேரடியாக தகுதி பெறுவார்கள் அல்லது முதல் 12 இடங்களை பிடிப்பவர்கள் தகுதி பெறுவார்கள். 83மீ விதியின் கீழ் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், செக் குடியரசின் ஜக்குப் வட்லெஜ் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே நேரடியாக தகுதி பெற்ற நிலையில், எறிதல் தூரத்தின் அடிப்படையில் இதர வீரர்கள் தகுதி பெற்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    நீரஜ் சோப்ரா
    இந்தியா
    உலக சாம்பியன்ஷிப்

    நீரஜ் சோப்ரா

    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி இந்தியா
    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி உலக சாம்பியன்ஷிப்
    உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கம்; சரித்திரம் படைத்த நீரஜ் சோப்ரா உலக சாம்பியன்ஷிப்
    தேசிய கொடி இல்லாமல் வந்த பாக். வீரரை இந்திய கொடியின் கீழ் நிற்க வைத்த நீரஜ் சோப்ரா; வைரலாகும் காணொளி பாகிஸ்தான்

    இந்தியா

    40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி நரேந்திர மோடி
    சந்திரயான் 4: நிலவின் தண்ணீரின் இருப்பை ஆய்வு செய்ய ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா சந்திரயான்
    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ராஜேஸ்வரி தகுதி துப்பாக்கிச் சுடுதல்
    இந்தியாவில் அதிகம் திருடப்படும் பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் எவை? பைக்

    உலக சாம்பியன்ஷிப்

    உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தோல்வி தடகள போட்டி
    3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் உலக சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை தடகள போட்டி
    உலக தடகள சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் தடகள போட்டி
    பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் லக்ஷ்யா சென், பிரணாய் எச்.எஸ். 2வது சுற்றுக்கு முன்னேற்றம் பேட்மிண்டன் செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023