
டி20 உலகக் கோப்பை: இந்தியா-இங்கிலாந்து அரையிறுதியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?
செய்தி முன்னோட்டம்
தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை இன்று மாலை எதிர்கொள்கிறது.
இது கடந்த 2022 ஆண்டு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணிக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், வானிலை முன்னறிவிப்பின்படி, இந்த போட்டியினை மழை சீர்குலைந்துவிடும்.
இரண்டாவது அரையிறுதி ஆட்டம் கைவிடப்பட்டால் என்ன நடக்கும் என்பது தெரிந்துகொள்ளுங்கள்.
விவரங்கள்
ரிசர்வ் நாள் இல்லை; கூடுதல் 250 நிமிடங்கள்
கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இந்த உயரழுத்த அரையிறுதி போட்டி இன்று இரவு 8:00 மணி IST துவங்கும்.
இருப்பினும், மழை அச்சுறுத்தல் இருப்பதால் அது வாஷ்அவுட் ஆகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது அரையிறுதிக்கு ரிசர்வ் நாள் எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இரண்டு அரையிறுதிகளுக்கும் கூடுதலாக 250 நிமிடங்களை ஒதுக்கியது.
முழுமையாக வாஷ்-அவுட் ஆனால், அந்தந்த சூப்பர் 8 குழுக்களில் முதல் இடத்தைப் பிடித்த அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
இந்தியா தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 குரூப் 1 இல் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, மழையால் போட்டி கைவிடப்பட்டால் இந்தியாதான் வெற்றி பெறும்.
DLS முறை
முடிவுக்காக ஒரு பக்கத்திற்கு 10 ஓவர்கள் தேவை
ஆட்ட நிலைமைகளின்படி, DLS முறையில் நாக் அவுட் முடிவு பெற, இரு அணிகளும் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் பேட் செய்ய வேண்டும்.
முதல் இரண்டு சுற்றுகளிலும் குறைந்தபட்சம் ஐந்து ஓவர்கள் தேவை.
டி20 போட்டிகளில் (12-11) இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா சற்றே முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி, இங்கிலாந்திற்கு எதிரான கடைசி ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது.
2022 T20 உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பிறகு இந்த இரு அணிகளும் T20I போட்டிகளில் சந்திக்கவில்லை.
இந்தாண்டின் உலகக்கோப்பை தொடரின் ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.