Page Loader
ஐபிஎல் 2024 : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் வழிகாட்டியாக இணைகிறார் சுரேஷ் ரெய்னா?
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் வழிகாட்டியாக இணைகிறார் சுரேஷ் ரெய்னா?

ஐபிஎல் 2024 : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் வழிகாட்டியாக இணைகிறார் சுரேஷ் ரெய்னா?

எழுதியவர் Sekar Chinnappan
Dec 24, 2023
05:31 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் 2024 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக இணைவதாக சூசகமாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, ரெய்னா உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார் மற்றும் இந்தியா மற்றும் அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்துள்ளார். 37 வயதான அவர், 2022 ஐபிஎல் மெகா ஏலத்தின் போது எந்த அணியாலும் எடுக்கப்படாததால், 2022 சீசனுக்கு பிறகு ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக இணைய உள்ளார் என வெளியான ஒரு செய்திக்கு ஊடகவியலாளர் போலியான செய்தி என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Suresh Raina set to join as mentor to Lucknow Super Giants

சுரேஷ் ரெய்னா பதில்

இந்த ட்வீட்டிற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, "ஏன்? உங்கள் செய்திகள்தான் எல்லா நேரத்திலும் உண்மையாக இருக்க வேண்டுமா?" எனக் குறிப்பிட்டுளளார். இது அவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக இணைவதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2022இல் ஐபிஎல்லில் அறிமுகமானது முதல் அதன் வழிகாட்டியாக இருந்தார். தற்போது அவர் தனது பழைய அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக மாறியுள்ள நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளூர் வீரரான சுரேஷ் ரெய்னாவை வழிகாட்டியாக இணைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், ஐபிஎல்லில் இதுவரை அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா ஐந்தாவது இடத்தில் உள்ளார்.