NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு
    சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு

    சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 24, 2023
    12:27 pm

    செய்தி முன்னோட்டம்

    சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய அமைப்பு, மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை முற்றிலும் புறக்கணித்ததை மேற்கோள் காட்டி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) விளையாட்டு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இது குறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தேசிய போட்டிகளுக்கான அறிவிப்பை அவசரகதியில் வெளியிட்டுள்ளதாகவும், உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, புதிய தலைவர் சஞ்சய் சிங், ஜூனியர் தேசிய போட்டிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று டிசம்பர் 21 அன்று அறிவித்தார்.

    இது விதிகளுக்கு எதிரானது என்றும், மல்யுத்த வீரர்கள் தயாராக இருக்க குறைந்தபட்சம் 15 நாள் அறிவிப்பு தேவை என்றும் அமைச்சகம் விவரித்துள்ளது.

    Sanjay Singh lead WFI Suspended by Union Sports Ministry

    பழைய நிர்வாகிகளின் தலையீடு

    மத்திய விளையாட்டு அமைச்சகம் தனது அறிவிப்பில், மேலும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட முந்தைய அலுவலக பணியாளர்களின் முழு கட்டுப்பாட்டில் புதிய அமைப்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

    "புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு விதிகளை முற்றிலும் புறக்கணித்து முன்னாள் அலுவலகப் பணியாளர்களின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தோன்றுகிறது" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து விலகியுள்ளார்.

    மேலும், பஜ்ரங் பூனியா, விஜேந்தர் சிங் போன்றோர் தங்கள் பதக்கங்களை திரும்ப அளிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மல்யுத்தம்
    மல்யுத்த வீரர்கள்
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மல்யுத்தம்

    'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி! மல்யுத்த போட்டி
    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! டெல்லி
    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! இந்தியா
    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை! இந்தியா

    மல்யுத்த வீரர்கள்

    பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி இந்தியா
    மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் கூட்டாக அறிக்கை! கிரிக்கெட்
    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா
    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்  அமித்ஷா

    இந்தியா

    கோ பர்ஸ்ட் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள்
    புதிய தொலைத்தொடர்பு சட்ட வரைவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது மத்திய அரசு மத்திய அரசு
    ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள் வங்கிக் கணக்கு
    தானியங்கி கார்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்த நிதின் கட்கரி நிதின் கட்கரி

    மத்திய அரசு

    உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவர்? உத்தரகாண்ட்
    டீப்ஃபேக்குகளுக்கு எதிராக நான்கு அம்ச உத்தியை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார் டீப்ஃபேக்
    சீன காய்ச்சல் எதிரொலி: மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்ய மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு சுகாதாரத் துறை
    ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து டீப்ஃபேக்கிற்கு இரையான ஆலியா பட் டீப்ஃபேக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025