SLvsSA ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு
சனிக்கிழமை (அக்.7) நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இலங்கை: குசல் பெரேரா, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக, துனித் வெல்லலகே, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க, கசுன் ராஜித. தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா.