NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இலங்கை கிரிக்கெட்டின் புதிய ஆலோசகராக சனத் ஜெயசூர்யா நியமனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இலங்கை கிரிக்கெட்டின் புதிய ஆலோசகராக சனத் ஜெயசூர்யா நியமனம்
    இலங்கை கிரிக்கெட்டின் புதிய ஆலோசகராக சனத் ஜெயசூர்யா நியமனம்

    இலங்கை கிரிக்கெட்டின் புதிய ஆலோசகராக சனத் ஜெயசூர்யா நியமனம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 15, 2023
    09:52 am

    செய்தி முன்னோட்டம்

    இலங்கை கிரிக்கெட் அணியானது சமீப காலமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில், இலங்கை அணியின் செயல்பாடுகள் மேலும் அந்த அணிக்கு அவப்பெயரையே தேடுத் தந்திருக்கின்றன.

    பத்து அணிகள் கலந்து கொண்ட ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தான் பங்கேற்ற ஒன்பது போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று ஏழு தோல்விகளை சந்தித்திருக்கிறது இலங்கை அணி.

    அந்நாட்டின் கிரிக்கெட் கட்டமைப்பையே ஒட்டுமொத்தமாக மறுகட்டமைப்பு செய்ய வேண்டியிருக்கும் சூழ்நிலையில், இலங்கையின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அந்நாட்டின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இலங்கை

    ஒராண்டு கால பதவி: 

    இந்த கிரிக்கெட் ஆலோசகர் பதவியில் ஓராண்டு காலம் சனத் ஜெயசூர்யா நீடிக்கவிருக்கும் நிலையில், இந்த ஓராண்டு காலத்திற்குள் அந்நாட்டின் பல்வேறு கிரிக்கெட் தொடர்பான செயல்பாடுகளையும் மேம்படுத்த அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    உடனடியாக பதவியேற்றிருக்கும் அவர், புதிய தேர்வுக்குழு தலைமையுடன் தொடங்கி, வீரர்கள், பயிற்சியாளர்கள் தொடங்கி உதவியாளர்கள் வரை அனைவரது செயல்பாடுகளையும் மேற்பார்வையிடவிருக்கிறார்.

    இலங்கையின் தலைநகரான கொழும்புவின் பிரேமதாசா மைதானத்தில் உள்ள ஹை-பெர்ஃபாமன்ஸ் சென்டரில் பணி செய்யவிருக்கிறார் சனத் ஜெயசூர்யா.

    பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வரும் இலங்கை கிரிக்கெட்டை சரியான பாதையில் கொண்டு செலுத்த, மறுகட்டமைப்பு செய்வதற்கான புதிய முயற்சியாக இதனை மேற்கொண்டிருக்கிறது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    கிரிக்கெட்

    சமீபத்திய

    மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து நியூயார்க்
    "நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்! பாகிஸ்தான்
    தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கை
    இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டம் தோல்வி; ஏவப்பட்ட சில நிமிடங்களில் EOS-09 மாயம் இஸ்ரோ

    இலங்கை

    சரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்  கடற்படை
    சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி  இந்தியா
    ஆசிய கோப்பை, SLvsAFG: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யும் இலங்கை ஆசிய கோப்பை
    SLvsAFG: போராடிய இலங்கை, ஆஃப்கானுக்கு 292 ரன்கள் இலக்கு! ஆசிய கோப்பை

    கிரிக்கெட்

    வங்கதேசம் vs நியூசிலாந்து 2வது டெஸ்ட் : முதல் நாளிலேயே 15 விக்கெட்டுகள் அவுட் டெஸ்ட் கிரிக்கெட்
    பிப்ரவரி 2024இல் மகளிர் ஐபிஎல் தொடர்; ஐபிஎல் ஆட்சிமன்ற குழு தலைவர் அருண் துமால் அறிவிப்பு மகளிர் ஐபிஎல்
    டிசம்பர் 8இல் தொடங்குகிறது யு19 ஆசிய கோப்பை; 10ஆம் தேதி இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பை
    Sports Round Up: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025