NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்; ரூ.26.75 கோடிக்கு ஷ்ரேயாஸ் ஐயரை கைப்பற்றியது பஞ்சாப் கிங்ஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்; ரூ.26.75 கோடிக்கு ஷ்ரேயாஸ் ஐயரை கைப்பற்றியது பஞ்சாப் கிங்ஸ்
    ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனார் ஷ்ரேயாஸ் ஐயர்

    ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்; ரூ.26.75 கோடிக்கு ஷ்ரேயாஸ் ஐயரை கைப்பற்றியது பஞ்சாப் கிங்ஸ்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 24, 2024
    04:49 pm

    செய்தி முன்னோட்டம்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் 2025இல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) நடைபெற்ற மெகா ஏலத்தில் ₹26.75 கோடிக்கு அவரை பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

    முன்னதாக, 2024 ஏலத்தில் ₹24.75 கோடி பெற்ற ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை இதன் மூலம் அவர் முறியடித்துள்ளார்.

    ஷ்ரேயாஸ் ஐயர் கேகேஆர் டனான காலத்தில் தனது தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தினார்.

    ஐபிஎல் 2024 வெற்றிக்கு அணியை வழிநடத்தினார் மற்றும் 10 ஆண்டுகால கோப்பை வறட்சிக்கு முடிவுகட்டினார்.

    பேட்டிங் திறமை

    ஷ்ரேயாஸ் ஐயரின் நிலையான ஆட்டம்

    பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் இல்லாவிட்டாலும், ஷ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் மற்றும் ஐபிஎல்லில் சிறந்த ஃபார்மில் இருந்தார்.

    அவரது 2024 ஐபிஎல் சீசன் குறிப்பாக அற்புதமானது. அங்கு அவர் 39 சராசரி மற்றும் 146.86 ஸ்ட்ரைக் ரேட்டில் 351 ரன்கள் எடுத்தார்.

    இந்த பதிவு அவர் ஒரு இன்னிங்ஸை எவ்வளவு சிறப்பாக உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறது மற்றும் தேவைப்படும் போது நிலைத்து நின்று ஆடும் சிறப்பையும் கொண்டுள்ளார்.

    ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு வழிநடத்திய ஒரே வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே. நைட் ரைடர்ஸ் அணியில் சேர்வதற்கு முன், ஷ்ரேயாஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.

    டெல்லி கேப்பிடல்ஸ்

    டெல்லி கேப்பிடல்ஸ் இறுதிப்போட்டியில் தோல்வி

    2020 ஆம் ஆண்டில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ் அவர்களின் முதல் இறுதிப் போட்டியை எட்டியது.

    அந்த இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டு டெல்லி கேப்பிடல்ஸ் தோற்றது.

    அவர்கள் சுமாரான 156 ரன்களை பாதுகாக்கத் தவறிவிட்டனர். ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போவின் படி, ஷ்ரேயாஸ் ஐயர் 115 ஐபிஎல் போட்டிகளில் 32.24 ரன்களில் 3,127 ரன்கள் எடுத்துள்ளார்.

    அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 125.48 ஆகும். 21 அரைசதங்களை எட்டியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், ஐபிஎல் ப்ளேஆஃப்களில் கேப்டனாக பல ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோரைப் பெற்ற நான்கு பேட்டர்களில் அவரும் ஒருவர்.

    2024 சீசனில் அவர் எம்எஸ் தோனி, ரோஹித் ஷர்மா மற்றும் டேவிட் வார்னர் போன்றவர்களுடன் இந்த சாதனைக்காக இணைந்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஷ்ரேயாஸ் ஐயர்

    𝐇𝐈𝐒𝐓𝐎𝐑𝐘 𝐂𝐑𝐄𝐀𝐓𝐄𝐃! 💥

    Shreyas Iyer receives the biggest IPL bid ever - INR 26.75 Crore 💰💰💰💰

    He is SOLD to @PunjabKingsIPL 👏👏#PBKS fans, which emoji best describes your mood ❓#TATAIPLAuction

    — IndianPremierLeague (@IPL) November 24, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    பஞ்சாப் கிங்ஸ்
    பிசிசிஐ

    சமீபத்திய

    எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையங்களில் செயல்படும் விமானங்களுக்கு கட்டாய பாதுகாப்பு உத்தரவுகளை வழங்கிய DGCA விமான நிலையம்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பிசிசிஐ  பிசிசிஐ
    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்  ஷுப்மன் கில்
    "உங்களை யாரென்றே தெரியாது!": சிம்புவை இன்சல்ட் செய்தாரா விராட் கோலி? விராட் கோலி

    ஐபிஎல் 2025

    விசில் போடு! டுவைன் பிராவோ கேகேஆர் அணியில் இணைவது குறித்து எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே பதிவு ஐபிஎல்
    ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன?  ஐபிஎல்
    சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி; எம்எஸ் தோனிக்காக ஐபிஎல் நிர்வாகம் செய்த அதிரடி மாற்றம் எம்எஸ் தோனி
    ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயம்; வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தை அறிவித்தது பிசிசிஐ ஐபிஎல்

    ஐபிஎல்

    ரோஹித் ஷர்மாவை 50 கோடிக்கு வாங்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் திட்டமா? உண்மை இதுதான் ரோஹித் ஷர்மா
    ருதுராஜை வளர்த்தெடுக்க சிஎஸ்கேவுக்கு ஐபிஎல் 2025இல் எம்எஸ் தோனி வேண்டும்; சுரேஷ் ரெய்னா கருத்து சுரேஷ் ரெய்னா
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஒப்பந்தம் ராகுல் டிராவிட்
    ஐபிஎல் தக்கவைத்து விதிகளை வெளியிடுவதில் தாமதம்; பிசிசிஐயின் திட்டம் என்ன? பிசிசிஐ

    பஞ்சாப் கிங்ஸ்

    டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : முதலில் பந்துவீச முடிவு ஐபிஎல் 2023
    பிபிகேஎஸ் vs கேகேஆர் : கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ஐபிஎல் 2023
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் தாமதம் ஐபிஎல் 2023
    அதிகமுறை பார்ட்னர்ஷிப்பில் 50+ ரன்கள் : விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான் கிரிக்கெட்

    பிசிசிஐ

    இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி தேர்வு: ஜெய் ஷா தலைமையில் இன்று இறுதியாகிறது ஐசிசி
    இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணி
    இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு தலைமை பயிற்சியாளரை கொண்டுவர பிசிசிஐ ஆலோசனை கிரிக்கெட்
    இந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் விரும்புகிறேன் என்று கெளதம் கம்பீர் வெளிப்படையாக அறிவிப்பு இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025