"விரைவில் பூரண உடற்தகுதி"; ஐபிஎல் ஏலத்திற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் வெளியிட்ட வீடியோ
ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, ரிஷப் பந்த், தான் மிகவும் நன்றாக இருப்பதாகவும், முழுமையாக குணமடைய குறைந்தது 2-3 மாதங்கள் ஆகும் என்றும் கூறினார். செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் ஐபிஎல் 2024க்கான ஏலம் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் துபாய் சென்றடைந்தார். ஐபிஎல் ஏலத்திலும் அவர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், ஏலத்திற்கு முன்பு டெல்லி கேப்பிடல்ஸ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பேசிய ரிஷப் பந்த், "நான் இன்னும் குணமடைந்து வருகிறேன். சில மாதங்களில் முழுமையாக தேறி வர முடியும் என்று நம்புகிறேன். நான் ஏலத்திற்காக துபாய் வந்தேன். இப்போதைக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் இங்கு மிகவும் உற்சாகமாகவும், எதிர்நோக்குவதாகவும் இருக்கிறது." எனக் கூறினார்.