Page Loader
3 வீரர்களுக்கு எதிராக இளம் இந்திய மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம்
3 வீரர்களுக்கு எதிராக இளம் இந்திய மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம்

3 வீரர்களுக்கு எதிராக இளம் இந்திய மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 03, 2024
05:18 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய மல்யுத்தத்தில் நிலவும் நெருக்கடி புதன்கிழமை (ஜனவரி 3) அன்று நூற்றுக்கணக்கான ஜூனியர் மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் கூடியதால் புதிய திருப்பத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஜூனியர் மல்யுத்த வீரர்கள் பலர் உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து, காவல்துறையினருக்கு தெரியாமல் ஜந்தர் மந்தரில் குவிந்துள்ளனர். அவர்களில் 300 பேர் பாக்பத்தின் சப்ராலியில் உள்ள ஆர்ய சமாஜ் அகாராவிலிருந்து வந்தவர்கள் என்றும் மேலும் பலர் நரேலாவில் உள்ள வீரேந்தர் மல்யுத்த அகாடமியிலிருந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இவர்கள் அனைவரும் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

Junior Indian Wrestlers protest against 3 players

மல்யுத்தத்தை 3 மல்யுத்த வீரர்களிடமிருந்து காப்பாற்ற வலியுறுத்தி போராட்டம்

'இந்த 3 மல்யுத்த வீரர்களிடமிருந்து சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு எங்கள் மல்யுத்தத்தை காப்பாற்றுங்கள்' என்று எழுதப்பட்ட பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். முரண்பாடாக, ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு இதே மைதானத்தில், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது பல குழுக்களும் இந்த மூவருக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் ஆதரவு தெரிவித்தனர். சமீபத்தில் இவர்கள் அரசு கொடுத்த பதக்கங்களை திருப்பிக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். இந்நிலையில், இந்த மூவரும் தங்கள் மல்யுத்த வாழ்க்கையை கேள்விக்குரியதாக்கி விட்டதாக இளம் மல்யுத்த வீரர்கள் தற்போது போராட்டத்தில் குவித்துள்ளனர்.