NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இங்கிலாந்து ஒருநாள் கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர்; ப்ரித்வி ஷா சாதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இங்கிலாந்து ஒருநாள் கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர்; ப்ரித்வி ஷா சாதனை
    இங்கிலாந்து ஒருநாள் கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ப்ரித்வி ஷா

    இங்கிலாந்து ஒருநாள் கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர்; ப்ரித்வி ஷா சாதனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 10, 2023
    06:18 pm

    செய்தி முன்னோட்டம்

    ப்ரித்வி ஷா இங்கிலாந்தில் நடந்து வரும் கவுண்டி கிரிக்கெட் அணிகளுக்கான ஒருநாள் கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.

    புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 9) நடந்த சாமர்செட்டுக்கு எதிரான போட்டியில் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக விளையாடிய ப்ரித்வி ஷா 153 பந்துகளில் 244 ரன்கள் எடுத்தார்.

    முதல் 81 பந்துகளில் 100 ரன்களையும், அடுத்த 48 பந்துகளில் 200 ரன்களையும் எட்டிய ப்ரித்வி ஷா, இதன் மூலம் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தையும் பூர்த்தி செய்தார்.

    முன்னதாக, பிப்ரவரி 2021 இல் விஜய் ஹசாரே டிராபியில் 227 ரன்களை எடுத்து தனது முதல் லிஸ்ட் ஏ இரட்டை சதத்தை அடித்தார்.

    prithvi shaw performance in india team

    இந்திய கிரிக்கெட்டில் ப்ரித்வி ஷா செயல்திறன்

    2018 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சதத்துடன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை இந்திய கிரிக்கெட் அணிக்காக தொடங்கிய ப்ரித்வி ஷா, அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார்.

    அவர் கடைசியாக ஜூலை 2021 இல் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக விளையாடினார்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்திற்கு எதிராக உள்நாட்டில் நடந்த டி20 அணியின் ஒரு பகுதியாக இருந்தார். ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை.

    மேலும், சமீப காலங்களில் களத்திற்கு வெளியே அடிக்கடி சர்ச்சையில் சிக்கியதாலும், அணியில் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழு உறுப்பினர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும், அணியில் அவரை எதிர்காலத்தில் சேர்ப்பதற்கான வாய்ப்பு குறைவுதான் என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    கிரிக்கெட்

    'பும்ரா இல்லனா தோல்வி நிச்சயம்' : முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் வார்னிங் கிரிக்கெட் செய்திகள்
    'உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டால்' ; மனம் திறந்த ஷர்துல் தாக்கூர் இந்திய கிரிக்கெட் அணி
    இந்திய சந்தையில் விற்பனைக்கே வராத இயர்பட்ஸை பயன்படுத்தும் விராட் கோலி; என்ன ஸ்பெஷல் தெரியுமா? விராட் கோலி
    அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி இந்திய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட் செய்திகள்

    ஆஷஸ் 2023 : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கர்
    இலங்கை பிரீமியர் லீக் 2023 : கிரிக்கெட் மைதானத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த பாம்பு கிரிக்கெட்
    தொடர்ந்து 13 வது முறையாக, WI க்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா  இந்திய கிரிக்கெட் அணி
    ODI உலகக்கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றம் உறுதி; பாக். கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025