NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பாங்காங் உறைந்த ஏரி மராத்தான்: உலகம் முழுவதிலுமிருந்து 120 போட்டியாளர்கள் பங்கேற்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாங்காங் உறைந்த ஏரி மராத்தான்: உலகம் முழுவதிலுமிருந்து 120 போட்டியாளர்கள் பங்கேற்பு
    பாங்காங் உறைந்த ஏரி மராத்தான் இரண்டாவது பதிப்பு பிப்ரவரி 20 அன்று நடந்தது

    பாங்காங் உறைந்த ஏரி மராத்தான்: உலகம் முழுவதிலுமிருந்து 120 போட்டியாளர்கள் பங்கேற்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 21, 2024
    10:34 am

    செய்தி முன்னோட்டம்

    லடாக்கில் உள்ள பாங்காங் உறைந்த ஏரி மராத்தானின் இரண்டாவது பதிப்பில் ஏழு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 120 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர்.

    'உலகின் மிக உயர்ந்த உறைந்த ஏரி மராத்தான்' என்று அழைக்கப்படும் லடாக்கின் பாங்காங் உறைந்த ஏரி மராத்தான் இரண்டாவது பதிப்பு பிப்ரவரி 20 அன்று நடந்தது.

    லடாக்கின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை, லடாக் நிர்வாக யூனியன் பிரதேசம் மற்றும் இந்திய ராணுவத்தின் 14 கார்ப்ஸின் ஆதரவுடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

    21 கிமீ மற்றும் 10 கிமீ என இரண்டு பிரிவுகளில், 120 ஓட்டப்பந்தய வீரர்கள் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர்.

    விளையாட்டுத்துறைச் செயலர் ரவீந்தர் குமார், சுஷுல் தொகுதி கவுன்சிலர் கொன்சோக் ஸ்டான்சின் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர்.

    நோக்கம்

    புவி வெப்படைதலை குறிக்கும் மாரத்தான்

    இந்த மாரத்தான் ஓட்டத்தின் நோக்கம், புவி வெப்பமடைதலின் தாக்கத்தால் உறைந்த பாங்காங் ஏரியின் மீது நடத்தப்படும் கடைசி ஓட்டமாக இது இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

    "திஸ்ட்ரன்" என்ற தலைப்பில் இமயமலைப் பனிப்பாறைகள் விரைவாக உருகுவதைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவது இந்த மாரத்தான் ஓட்டத்தின் குறிக்கோள்.

    அதே நேரத்தில், சங்தாங் போன்ற இடங்களில் குளிர்கால சுற்றுலாவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சுஷுலின் கவுன்சிலர் குறிப்பிட்டுள்ளார்.

    14,273 அடி உயரத்தில், கடுமையான பனிப்பொழிவுகளுக்கு இடையே இந்த ஓட்டம் நடத்தப்பட்டது.

    அப்போது அங்கே நிலவிய வெப்பநிலை -15 ° C ஆகும்.

    அதிகாரப்பூர்வமாக இது உலகின் கடினமான மாரத்தான்களில் ஒன்றாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லடாக்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    லடாக்

    கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார் இந்தியா
    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்  இந்தியா
    லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது  டெல்லி
    சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே அமைக்கப்படவிருக்கும் புதிய சாலையில் என்ன சிறப்பு? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025