Page Loader
'பணத்தால் விசுவாசத்தை வாங்க முடியாது'; சிஎஸ்கே வீரரின் இன்ஸ்டா பதிவால் பரபரப்பு
சிஎஸ்கே வீரரின் இன்ஸ்டா பதிவால் பரபரப்பு

'பணத்தால் விசுவாசத்தை வாங்க முடியாது'; சிஎஸ்கே வீரரின் இன்ஸ்டா பதிவால் பரபரப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 11, 2023
06:10 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா ஐபிஎல் 2024 வர்த்தக காலக்கெடு முடிவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஒரு பூடகமான பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சனிக்கிழமையன்று (டிசம்பர் 9), பத்திரனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "பணத்தால் விசுவாசத்தை வாங்க முடியாது" என்ற பதிவுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு வைரலாக மாறிய நிலையில், சில சிஎஸ்கே ரசிகர்கள், ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக வர்த்தக ஒப்பந்தத்திற்காக மதீஷா பத்திரனா வேறு ஏதேனும் ஐபிஎல் அணியால் அணுகப்பட்டாரா என்று கேள்வி எழுப்பினர். வீரர்கள் வர்த்தகத்திற்கான காலக்கெடு டிசம்பர் 12 அன்று முடிவடைய உள்ள நிலையில், அவர் இந்த பதிவை வெளியிட்டதுதான் ரசிகர்களிடம் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

Matheesha Pathirana instagram story gets attention

மதீஷா பத்திரனாவை வாங்க மும்பை இந்தியன்ஸ் அணி முயற்சியா?

மும்பை இந்தியன்ஸ் அணி சமீபத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம் மூலம் கைப்பற்றியது. இதற்காக கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கைமாற்றியது. ஆனால், மதீஷா பத்திரனாவை பொறுத்தவரை 2023இல் ரூ.20 லட்சத்திற்கு அவர் சென்னை சூப்பர் கிங்ஸால் வாங்கப்பட்டார். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு பெரிய தொகை அல்ல என்பதால், அவரை வாங்க மும்பை இந்தியன்ஸ் முயற்சி செய்வதாக பேச்சு எழுந்த நிலையில், தற்போது மதீஷா பத்திரனா வெளியிட்டுள்ள பதிவு அதை குறிப்பிட்டுத்தான் என கூறப்படுகிறது. முன்னதாக, 2023 ஐபிஎல் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றதில் மதீஷா பத்திரனாவும் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.