NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியா vs ஆஸ்திரேலியா: மின்சார வசதியில்லாத  ராய்பூர் கிரிக்கெட் மைதானம், வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா vs ஆஸ்திரேலியா: மின்சார வசதியில்லாத  ராய்பூர் கிரிக்கெட் மைதானம், வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
    மின்சார வசதியில்லாத ராய்பூர் கிரிக்கெட் மைதானம், வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

    இந்தியா vs ஆஸ்திரேலியா: மின்சார வசதியில்லாத  ராய்பூர் கிரிக்கெட் மைதானம், வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 01, 2023
    01:24 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள ஷாகீத் வீர் நாராயண் சிங் கிரிக்கெட் மைதானத்திலேயே நடைபெறவிருக்கிறது. இன்று

    இரவு 6.30-க்கு டாஸும், 7 மணிக்கு போட்டியும் தொடங்கவிருக்கும் நிலையில், அந்தக் கிரிக்கெட் மைதானத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சார வசதி இல்லை என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியிருக்கிறது.

    ஆம், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ செயல்பட்டு வரும் இந்தியாவில் இருக்கும் ஒரு கிரிக்கெட் மைதானத்தில் அடிப்படை மின்சார வசதி கூட இல்லை.

    2009ம் ஆண்டு முதல் இந்த கிரிக்கெட் மைதானத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கான பணத்தை மின்சார வாரியத்திற்கு செலுத்தாமல் இருப்பதே, இங்கு தற்போது மின்சார வசதி இல்லாமல் இருப்பதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

    கிரிக்கெட்

    மின்சார வாரியத்திற்கு செலுத்தப்படாத பணம்: 

    2009ம் ஆண்டுக்குப் பிறகு மின்சாரத்திற்கான பணத்தை செலுத்தாமல் இருந்ததன் காரணமாக, தற்போது ரூ.3.16 கோடி அந்த மைதானத்தின் பெயரில் மின்சார நிறுவனத்திடம் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்சார நிறுவனமானது இந்த மைதானத்திற்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்த ஐந்து ஆண்டுகள் கடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்சாரம் இல்லாமலேயே இந்த மைதானத்தில் ஆறு ஐபிஎல் போட்டிகள் மற்றும் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது.

    ஆம், இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய ஒரு ஒருநாள் போட்டி இந்த மைதானத்திலேயே நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய டி20 போட்டியே இந்த மைதானத்தில் நடைபெறவிருக்கும் முதல் சர்வதேச டி20 போட்டியாகும்.

    பிசிசிஐ

    மின்சாரம் இல்லாமல் சர்வதேச போட்டிகள் எப்படி சாத்தியம்? 

    நிரந்தரமாக இல்லாமல் தற்காலிகமாக 200 KV வரையிலான மின்சார வசதியானது தற்போது இந்த மைதானத்திற்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தற்காலிக மின்சார வசதியை 1000 KV ஆக உயர்த்த விண்ணப்பம் அளிக்கப்பட்டு, அங்கீகரிக்கவும் பட்டிருக்கிறது. ஆனால், அதிகரிப்பதற்கான வேலைகள் இன்னும் துவங்கப்படவில்லை.

    கிரிக்கெட் மைதானத்திற்கு முக்கிமயான ப்ளட்லைட்களை ஜெனரேட்டர் மூலமாகவே இயக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த மைதானம் கட்டப்பட்ட பிறகு, இதன் பராமரிப்புப் பணிகளானது பொதுப்பணித் துறையிடமும், இதர செலவுகள் விளையாட்டுத் துறையிடமும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இரு துறைகளுமே மின்சாரத்திற்கான தொகையை செலுத்தாமல் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்திருக்கின்றனர்.

    இரு துறைகளுக்கும் பல்வேறு முறை மின்சார நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    பிசிசிஐ
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்? மின்சார வாகனம்
    வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியம்
    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு
    பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு பெங்களூர்

    டி20 கிரிக்கெட்

    2025 ஆசிய கோப்பை மீண்டும் டி20 வடிவத்தில் நடத்தப்படும் என அறிவிப்பு ஆசிய கோப்பை
    இந்தியாவுக்கு எதிராக டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு கிரிக்கெட்
    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்; டி20 கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமனம் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி
    காயத்தில் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய டி20 அணியை வழிநடத்தப்போவது யார்? கிரிக்கெட்

    பிசிசிஐ

    செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடர்; பிசிசிஐ போட்டி அட்டவணை வெளியீடு ஒருநாள் கிரிக்கெட்
    ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் மாற்றம்; ஜெய் ஷா அறிவிப்பு ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் மோதல் அக்டோபர் 14க்கு மாற்றம் எனத் தகவல் ஒருநாள் உலகக்கோப்பை
    எம்எஸ் தோனியை அணியில் சேர்க்க மறுத்த சவுரவ் கங்குலி; பின்னணியை பகிர்ந்த முன்னாள் தேர்வாளர் எம்எஸ் தோனி

    இந்தியா

    காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணை: அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா, ஏன் கனடாவுக்கு ஒத்துழைக்கவில்லை? கனடா
    ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ? தமிழக காவல்துறை
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025