NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / உயரம் தாண்டுதலில் ஹாட்ட்ரிக் சாதனை புரிந்த தமிழக வீரர் மாரியப்பன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உயரம் தாண்டுதலில் ஹாட்ட்ரிக் சாதனை புரிந்த தமிழக வீரர் மாரியப்பன்
    உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றார்

    உயரம் தாண்டுதலில் ஹாட்ட்ரிக் சாதனை புரிந்த தமிழக வீரர் மாரியப்பன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 04, 2024
    11:18 am

    செய்தி முன்னோட்டம்

    பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டி தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இதன் மூலம் தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று பாராலிம்பிக்ஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி பாராலிம்பிக்ஸ் போட்டி தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்க இந்தியா சார்பில் 84 வீரர்கள் பாரிஸ் சென்றுள்ளனர்.

    உயரம் தாண்டுதல்

    உயரம் தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்றவர்கள்

    இந்த நிலையில், ஆண்களுக்கான டி63 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிலிருந்து தமிழக வீரர் மாரியப்பன், ஷரத் குமார், சைலேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி ஷரத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.

    அமெரிக்காவின் ஃப்ரெச் எஸ்ரா 1.94 மீட்டர் உயரத்தை தாண்டி தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.

    மாரியப்பன்

    மாரியப்பனின் பதக்க பட்டியல்

    தமிழக வீரரான மாரியப்பன் முதன்முதலில் 2016-ம் ஆண்டு பாராலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

    அதனைத்தொடர்ந்து 2020 டோக்யோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    தற்போது நடப்பு பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

    இதன்மூலம் பாராலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் மாரியப்பன்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாராலிம்பிக்ஸ்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    பாராலிம்பிக்ஸ்

    ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக பாராலிம்பியன் பிரமோத் பகத்துக்கு 18 மாதங்கள் தடை ஒலிம்பிக்
    பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: பாக்யஸ்ரீ ஜாதவ், சுமித் ஆன்டில் தேசியக் கொடி ஏந்திச் செல்வார்கள் என அறிவிப்பு பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
    பாராலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு தங்கம் வென்ற முதல் இந்திய பெண்; வரலாறு படைத்த அவனி லெகாரா துப்பாக்கிச் சுடுதல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025