LOADING...
ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படாததால் அதிர்ச்சி: பிரதமர் மோடி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு மணிகா பத்ரா கடிதம்
பிரதமர் மோடி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு மணிகா பத்ரா கடிதம்

ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படாததால் அதிர்ச்சி: பிரதமர் மோடி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு மணிகா பத்ரா கடிதம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 19, 2026
12:43 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய டேபிள் டென்னிஸ் துறையின் முன்னணி நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான முதன்மை இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள 10 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ அணியில், அவர் மாற்று வீராங்கனையாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்வு முறை தனக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள 31 வயதான மணிகா பத்ரா, தேர்வு விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் குற்றம் சாட்டிப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

காரணம்

மணிகா பத்ரா முதன்மை அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம்

டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் புதிய விதிமுறைகளின்படி, சர்வதேச தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் வீரர்கள் மட்டுமே நேரடியாகத் தகுதி பெறுவர். தற்போதைய தரவரிசையின்படி மணிகா பத்ரா 51 வது இடத்தில் உள்ளார். அதாவது தகுதி வரம்பிற்கு வெறும் 3 புள்ளிகள் மட்டுமே குறைவாகப் பெற்றுள்ளார். மேலும், அவர் நடப்பு சீசனில் தேசிய அளவிலான உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்காததால், தேசிய தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெறவில்லை. இதன் காரணமாக, 9 பேர் கொண்ட தேர்வு வாரியம் அவருக்குப் பதிலாகத் தேசிய தரவரிசையில் முன்னணியில் உள்ள வீரர்களுக்கு முன்னுரிமை அளித்து, மணிகாவை மாற்று வீராங்கனையாக அறிவித்துள்ளது.

குற்றச்சாட்டு

"தேர்வு முறையில் பாரபட்சம்" - மணிகா பத்ரா கடிதத்தில் குற்றச்சாட்டு

இந்த அதிரடி நீக்கம் குறித்துத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கடிதத்தைப் பகிர்ந்துள்ள மணிகா பத்ரா, "ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியில் நான் சேர்க்கப்படாதது எனக்கு ஆழ்ந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான தெளிவான காரணங்கள் எதுவும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. கடந்த ஆசிய விளையாட்டுத் தேர்வு சுழற்சியின் போது, உலகத் தரவரிசையில் 50 இடங்களுக்கு வெளியேயும், தேசிய தரவரிசையில் 10 இடங்களுக்கு வெளியேயும் இருந்த சில வீரர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டு அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால், எனது விஷயத்தில் மட்டும் அதே விதிகள் ஏன் பாரபட்சமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

கோரிக்கை

பிரதமர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை

சர்வதேச அளவில் இந்தியாவின் இரண்டாவது சிறந்த வீராங்கனையாகத் திகழும் மணிகா பத்ரா, தனது கடிதத்தின் மூலம் நாட்டின் உயரிய விளையாட்டு அதிகாரிகளின் தலையீட்டைக் கோரியுள்ளார். "சர்வதேச அளவில் நான் பல ஆசிய சாம்பியன்களை வீழ்த்திப் பதக்கங்களை வென்றுள்ளேன். தரவரிசை மாற்றங்கள் என்பவை தற்காலிகமானவை. எனவே, கௌரவமிக்கப் பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, அணித் தேர்வு முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மையையும், சமமான நீதியையும் உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள முதன்மை மகளிர் அணியை ஸ்ரீஜா அகுலா முன்னின்று வழிநடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement