
மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல்
செய்தி முன்னோட்டம்
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) டாடா ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் முழுமையான ஆலோசனைகளுக்குப் பிறகு, மீதமுள்ள போட்டிகள் மே 17, 2025 முதல் ஆறு குறிப்பிட்ட மைதானங்களில் மட்டும் நடைபெறும் என்றும், ஜூன் 3, 2025 அன்று இறுதிப் போட்டியுடன் முடிவடையும் என்றும் பிசிசிஐ உறுதிப்படுத்தியது.
இதன்படி பெங்களூர், ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் அகமதாபாத்தில் போட்டிகள் நடைபெறும்.
மொத்தம் 17 போட்டிகள் விளையாட திட்டமிடப்பட்டுள்ளன, இதில் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு போட்டிகளிலும், மற்ற நாட்களில் ஒரு போட்டியும் நடக்கும்.
பிளேஆஃப் போட்டிகள்
பிளேஆஃப் போட்டிகள் எப்போது?
குவாலிஃபையர் 1 மே 29 அன்று நடைபெறும், எலிமினேட்டர் மே 30 அன்று நடைபெறும் மற்றும் குவாலிஃபையர் 2 ஜூன் 1 அன்று நடைபெறும், மற்றும் இறுதிப்போட்டி ஜூன் 3 அன்று நடைபெறும். பிளேஆஃப் போட்டிகளுக்கான இடங்கள் குறித்த விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும்.
இதற்கிடையில் இந்திய ஆயுதப்படைகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட பிசிசிஐ, பாதுகாப்பை மீட்டெடுப்பதில் அவர்களின் முக்கிய பங்கை பாராட்டியது.
இதன்படி, மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 தொடரில், மே 17 அன்று முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பெங்களூரில் நடைபெற உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஐபிஎல் நிர்வாகத்தின் அறிவிப்பு
🗓️ #TATAIPL 2025 action is all set to resume on 17th May 🙌
— IndianPremierLeague (@IPL) May 12, 2025
The remaining League-Stage matches will be played across 6⃣ venues 🏟️
The highly anticipated Final will take place on 3rd June 🏆
Details 🔽https://t.co/MEaJlP40Um pic.twitter.com/c1Fb1ZSGr2