நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஐபிஎல் 2023ல் முதல் சிக்ஸரை அடித்த டேவிட் வார்னர்
ஐபிஎல் 2023 தொடரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 24) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் ஒருவழியாக இந்த தொடரில் முதல் சிக்ஸரை அடித்துள்ளார். டேவிட் வார்னர் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் டேவன் கான்வேக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருந்தாலும், 6 போட்டிகளில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் இருந்தார். இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிக்ஸர் அடித்து நீண்ட கால போராட்டத்தை முடித்து வைத்துள்ளார். எனினும் நடப்பு சீசனில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்களில் வார்னர் முதலிடத்தில் உள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.