NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / அதிகரிக்கும் விபத்துகள்; ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிகரிக்கும் விபத்துகள்; ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு
    ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு

    அதிகரிக்கும் விபத்துகள்; ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 19, 2024
    04:41 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிகரித்து வரும் ரயில் விபத்துகளுக்கு பதிலடியாக, முக்கியமான பணியிடங்களை நிரப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களை பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

    தற்போது ஏறக்குறைய 3,00,000 காலி பணியிடங்களைக் கொண்ட இந்திய ரயில்வேயில் அதிகரித்து வரும் விபத்து விகிதங்கள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகிய இரண்டையும் நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

    எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் செலவுகளைக் குறைப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமையினால் அடிக்கடி தொடருந்து விபத்துக்கள் ஏற்படுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இதன்படி, இந்திய ரயில்வே 65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்களை அவர்களின் கடந்த ஐந்தாண்டு பணியில் எந்த ஒழுங்கு நடவடிக்கையிலும் சிக்காதவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

    பணிகள்

    ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பணிகள்

    ஓய்வு பெற்றவர்கள் லோகோமோட்டிவ் பைலட்கள், டிராக் பராமரிப்பு பொறியாளர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் போன்ற பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் கொண்டு வரப்படுவார்கள்.

    இவ்வாறு சேர்க்கப்படும் ஊழியர்களின் செயல்திறனை உறுதிப்படுத்த, நல்ல உடல் தகுதி உள்ளவர்களுக்கே பணி வழங்கப்படும்.

    உடனடியாக நிரந்தர ஆட்சேர்ப்பு தேவையில்லாமல் தினசரி செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கான தற்காலிக நடவடிக்கையாக ஓய்வு பெற்ற ஊழியர்களை திரும்ப அழைத்து வருவதற்கான முடிவு பார்க்கப்படுகிறது.

    ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதன் மூலம், இந்திய ரயில்வே ஓய்வூதிய நிதி மற்றும் நிரந்தர ஊழியர்களுடன் தொடர்புடைய பிற சலுகைகள் தொடர்பான செலவுகளைக் குறைக்கலாம்.

    எனினும், இந்த நடவடிக்கை ரயில்வே துறையில் வேலை தேடும் இளைய தலைமுறையினருக்கான வேலை வாய்ப்புகளில் இதன் தாக்கம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ரயில்வே
    இந்தியா
    ரயில் நிலையம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் வரமாட்டார் என இதர தகவல்; ஆஸ்திரேலிய வீரர்களும் தவிர்க்க வாய்ப்பு ஐபிஎல் 2025
    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ

    இந்திய ரயில்வே

    இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன? ரயில்கள்
    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல் திருநாள்
    புக் செய்த ட்ரெயின் டிக்கெட்டின் தேதியை மாற்ற வேண்டுமா? விவரம் உள்ளே ரயில்கள்
    அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு ரயில்கள்

    இந்தியா

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.7 பில்லியன் டாலர்கள் குறைந்தது; ஆர்பிஐ அறிக்கை ரிசர்வ் வங்கி
    தெலுங்கானா மாநிலத்தில் டிஎஸ்பியாக பதவியேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் முகமது சிராஜ்
    ஐநா அமைதிப் படை நிலைகள் மீதான இஸ்ரேல் தாக்குதல்; இந்தியா கவலை இஸ்ரேல்
    கவரைப்பேட்டை ரயில் விபத்து; மீண்டும் தொடங்கியது மீட்பு பணிகள்; விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஆய்வு ரயில்கள்

    ரயில் நிலையம்

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்
    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி  சென்னை
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது? ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025