NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டிராவில் முடிந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி; விதர்பா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிராவில் முடிந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி; விதர்பா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது எப்படி?
    மூன்றாவது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது விதர்பா

    டிராவில் முடிந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி; விதர்பா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது எப்படி?

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 02, 2025
    07:46 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஞ்சி கோப்பை 2024-25 சீசனின் இறுதிப் போட்டி டிராவில் முடிந்த நிலையில், விதர்பா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    அந்த அணி ரஞ்சி கோப்பை வெல்வது இது மூன்றாவது முறையாகும்.

    முன்னதாக, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அக்‌ஷய் வாட்கர் தலைமையிலான விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்கள் எடுத்தது.

    பதிலுக்கு, சச்சின் பேபி தலைமையிலான கேரளா அணி 342 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 37 ரன்கள் முன்னிலை பெற்ற விதர்பா, இரண்டாவது இன்னிங்ஸில் 375 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஐந்து நாட்கள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    கேரளா

    வரலாற்று வாய்ப்பை இழந்த கேரளா

    போட்டி டிராவில் முடிந்த நிலையில், விதிமுறைகளின் படி, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பெற்ற 37 ரன்கள் முன்னிலை மூலம், விதர்பா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    விதர்பா அணி இதற்கு முன்னர் 2017-18 மற்றும் 2018-19 ஆகிய சீசன்களில் பட்டத்தை வென்றிருந்த நிலையில், இது அவர்களுக்கு மூன்றாவது பட்டமாகும்.

    விதர்பா அணியின் பந்துவீச்சாளர் ஹரீஷ் துபே ரஞ்சி கோப்பையின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, கேரளா அணி ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், அதை வென்று தனது முதல் ரஞ்சி கோப்பை பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஞ்சி கோப்பை
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    மொழி சர்ச்சையில் "எனக்கு ஆதரவாக நின்றதற்கு தமிழகத்திற்கு நன்றி": கமல்ஹாசன் கமல்ஹாசன்
    வரலாற்று சிறப்புமிக்க கத்ரா-ஸ்ரீநகர் ரயில் சேவையை பிரதமர் மோடி சனிக்கிழமை துவங்கி வைக்கிறார்  பிரதமர் மோடி
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்
    வேளாண் பயங்கரவாதம் என்றால் என்ன? FBI பதறுவது எதற்காக? இது என்ன செய்யக்கூடும்? வேளாண்

    ரஞ்சி கோப்பை

    42 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி! ரஞ்சி கோப்பையில் சரித்திரம் படைத்த டெல்லி அணி! கிரிக்கெட்
    ரஞ்சி கோப்பை 2023 : தமிழ்நாட்டுக்கு எதிராக களமிறங்குகிறார் ஆல்ரவுண்டர் ஜடேஜா! கிரிக்கெட்
    ரஞ்சி கோப்பை 2022-23 : மும்பைக்கு எதிராக சதமடித்தார் கேதர் ஜாதவ்! கிரிக்கெட்
    ரஞ்சி கோப்பை 2022-23 : எலும்பு முறிவால் பாதியிலேயே வெளியேறினார் ஹனுமா விஹாரி! கிரிக்கெட்

    கிரிக்கெட்

    டிஎன்பிஎல் 2025 ஏலத்தில் விஜய் சங்கர் மற்றும் முகமது அதிகபட்சமாக ₹18 லட்சத்திற்கு ஏலம் டிஎன்பிஎல்
    ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியில் காயமடைந்த கசன்ஃபருக்கு பதிலாக முஜீப்-உர்-ரஹ்மான் சேர்ப்பு மும்பை இந்தியன்ஸ்
    ரஞ்சி கோப்பை அரையிறுதியில் இருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் காயம் காரணமாக விலகினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    ஐபிஎல் 2025: மார்ச் 22இல் முதல் போட்டி; கொல்கத்தா ஈடன் கார்டனில் இறுதிப்போட்டி; விரிவான போட்டி அட்டவணை ஐபிஎல் 2025

    கிரிக்கெட் செய்திகள்

    மகளிர் ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வரலாறு படைத்தது மகளிர் ஐபிஎல்
    ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு போட்டி அட்டவணை சென்னை சூப்பர் கிங்ஸ்
    சாம்பியன்ஸ் டிராபிக்காக துபாயில் புதிய மைதானங்கள் அமைப்பு சாம்பியன்ஸ் டிராபி
    பிசிசிஐ விதியை பின்பற்றி விராட் கோலிக்கு ஹோட்டலில் இருந்து வந்த சிறப்பு உணவு பார்சல் விராட் கோலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025