ஜானி பேர்ஸ்டோ அவுட் சர்ச்சை : ஆஸ்திரேலியாவை விளாசிய கவுதம் காம்பிர்
லார்ட்ஸில் நடைபெற்ற ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஜானி பேர்ஸ்டோயை ஆஸ்திரேலியா சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாக்கியதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர் விமர்சித்துள்ளார். இது குறித்து காம்பிர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஹேய் ஸ்லெட்ஜர்களே, விளையாட்டின் லாஜிக் உங்களுக்கும் பொருந்துமா அல்லது இந்தியர்களுக்கு மட்டும்தானா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சைக்குரிய அவுட்டைத் தொடர்ந்து, இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கிடையே, காம்பிர் மட்டுமல்லாது ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் இந்த சர்ச்சைக்குரிய அவுட்டை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.