CT 2025: இந்தியாவுடனான அரையிறுதிக்கு முன் ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது ஏன்?
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி மோதலுக்கு முன்னதாக, தொடக்க ஆட்டக்காரர் மேத்தியூ ஷார்ட்டுக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் கூப்பர் கோனொலியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் இறுதி குரூப் பி போட்டியில் ஏற்பட்ட குவாட் காயம் காரணமாக, போட்டியின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து ஷார்ட் நீக்கப்பட்டுள்ளார்.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஷார்ட் இடம்பெறாதது குறித்து சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
ஷார்ட் மிகவும் சிரமப்படுவதாகவும், போட்டிகளுக்கு இடையேயான குறுகிய நேரத்தில் குணமடைவது சாத்தியமற்றது எனக் கூறினார்.
ஷார்ட் நீக்கப்பட்டதால், ஆஸ்திரேலிய அணியில் ஒரே பயண ரிசர்வ் வீரராக இருந்த கோனொலி, இப்போது முக்கியமான நாக் அவுட் கட்டத்திற்கான முக்கிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அரையிறுதி
அரையிறுதிப் போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று இரண்டு ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டதை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, குழு பி'யில் நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
அதே நேரம், குரூப் ஏ பிரிவில் குரூப் ஏ பிரிவில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
இதையடுத்து துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டி செவ்வாய் கிழமை (மார்ச் 4) அன்று நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெறும் அணி மார்ச் 9 அன்று நடைபெற உள்ள நிலையில், புதன்கிழமை மற்றொரு அரையிறுதியில் மோதும் தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து போட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.