கவுண்டி கிரிக்கெட்டில் சதமடித்த சேதேஷ்வர் புஜாரா
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) ஹோவில் நடந்த கவுண்டி சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது பிரிவில் டர்ஹாமுக்கு எதிராக சசெக்ஸ் அணிக்காக முழுநேர கவுண்டி கேப்டனாக அறிமுகமான சேதேஷ்வர் புஜாரா சதம் அடித்தார். புஜாரா, 10வது ஓவரில் 2 விக்கெட்டுக்கு 44 ரன்களில் சசெக்ஸ் அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது களமிறங்கி ஒரு சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 115 ரன்கள் எடுத்தார். இது முதல்தர கிரிக்கெட்டில் புஜாராவின் 57வது சதமாகும். புஜாரா இதுவரை 246 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 51க்கு மேல் சராசரியுடன் 18,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜூன் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான பயிற்சிக் களமாக புஜாரா இதை பயன்படுத்தி வருகிறார்.