NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / செஸ் உலகக் கோப்பை: கேண்டிடேட்ஸ் போட்டியை அடைந்த மூன்றாவது இளைஞர் பிரக்ஞானந்தா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செஸ் உலகக் கோப்பை: கேண்டிடேட்ஸ் போட்டியை அடைந்த மூன்றாவது இளைஞர் பிரக்ஞானந்தா 
    'கிராண்ட் மாஸ்டர்' விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இந்தப் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது இந்தியரானார் பிரக்ஞானந்தா

    செஸ் உலகக் கோப்பை: கேண்டிடேட்ஸ் போட்டியை அடைந்த மூன்றாவது இளைஞர் பிரக்ஞானந்தா 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 22, 2023
    08:41 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, 2023 செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    டை-பிரேக் மூலம் 3.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில், உலகின் மூன்றாம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி அவர் இறுதி சுற்றிற்கு முன்னேறினார்.

    பிரக்ஞானந்தா, உலகின் முதல் நிலை வீரரும், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றவருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இறுதிப் போட்டியில் எதிர்கொள்வார்.

    உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நிகழ்வான 'கேண்டிடேட்ஸ்' போட்டிக்கு தகுதி பெற்ற மூன்றாவது இளைஞர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    card 2

    கேண்டிடேட்ஸ் டோர்னமென்ட் என்றால் என்ன?

    கேண்டிடேட்ஸ் டோர்னமென்ட் என்பது உலக செஸ் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதி நிகழ்வாகும். FIDE உலகக் கோப்பையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்கள் கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கது.

    எனவே, பிரக்ஞானந்தா இந்த நிலைக்குத் தகுதி பெற்றுள்ளார். கேண்டிடேட்ஸ் போட்டியின் வெற்றியாளர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு உலக செஸ் சாம்பியனை எதிர்கொள்கிறார். சீன கிராண்ட்மாஸ்டர் டிங் லிரன் தற்போது நடப்பு சாம்பியனாக உள்ளார்.

    முன்னதாக நடந்த போட்டியில், பிரக்ஞானந்தா 5-4 என்ற கணக்கில் தனது சகநாட்டவரான எரிகைசி அர்ஜுனை தோற்கடித்து செஸ் உலகக் கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன் விளைவாக, 'கிராண்ட் மாஸ்டர்' விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இந்தப் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது இந்தியரானார் இவர்.

    ட்விட்டர் அஞ்சல்

    கேண்டிடேட்ஸ் போட்டியை அடைந்த பிரக்ஞானந்தா 

    #JUSTIN | உலகக்கோப்பை செஸ்: இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா #FIDEWorldCup2023 | #FIDE | #FIDEWorldCup | #Praggnanandhaa | #FabianoCaruana pic.twitter.com/uplhzaf0xw

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செஸ் போட்டி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    செஸ் போட்டி

    விஸ்வநாதன் ஆனந்தின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் கிராண்ட்மாஸ்டர்
    உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஆர்.பிரக்ஞானந்தா உலக கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025