Page Loader
ஈடன் கார்டன்ஸில் 1,000 ஐபிஎல் ரன்கள் எடுத்த முதல் வெளிநாட்டு வீரர் ஆனார் ஆண்ட்ரே ரஸ்ஸல்
ஈடன் கார்டன்ஸில் 1,000 ரன்கள் எடுத்து ஆண்ட்ரே ரஸ்ஸல் சாதனை

ஈடன் கார்டன்ஸில் 1,000 ஐபிஎல் ரன்கள் எடுத்த முதல் வெளிநாட்டு வீரர் ஆனார் ஆண்ட்ரே ரஸ்ஸல்

எழுதியவர் Sekar Chinnappan
May 04, 2025
06:45 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் புதிய வரலாறு படைத்தார். அதாவது, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 1,000 ரன்கள் எடுத்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான கேகேஆரின் முக்கியமான 2025 ஐபிஎல் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் இந்த மைல்கல்லை எட்டினார். 2014 முதல் அந்த அணியுடன் இருக்கும் ரஸ்ஸல், ஐபிஎல்லில் கேகேஆருக்காக 2,500 ரன்களைக் கடந்தார், இது அவரது நீண்டகால தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மெதுவான தொடக்கம்

மெதுவாக தொடங்கி சூறாவளியாக மாறிய ஆண்ட்ரே ரஸ்ஸல்

ஆண்ட்ரே ரஸ்ஸல் இந்த போட்டியில் தனது முதல் 9 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து மெதுவாக தொடங்கினாலும், அதன் பிறகு ஒரு அபாரமான தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டார். அவர், நடப்பு சீசனின் முதல் அரைசதத்தை வெறும் 22 பந்துகளில் எட்டினார். மேலும், வெறும் 25 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் உட்பட 57 ரன்கள் எடுத்தார். அவரது அபார பேட்டிங், கடைசி ஐந்து ஓவர்களில் 85 ரன்கள் எடுத்து, கேகேஆர் அணி 206/4 ரன்கள் குவிக்க உதவியது. ரஸ்ஸல் தவிர கேகேஆர் அணியின் இன்னிங்ஸுக்கு இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.