NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / "அச்சுறுத்தலை தாண்டி தான் இந்தியா வந்தோம்" : ஆசிய கோப்பை சர்ச்சைக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய ஷாஹித் அப்ரிடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    "அச்சுறுத்தலை தாண்டி தான் இந்தியா வந்தோம்" : ஆசிய கோப்பை சர்ச்சைக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய ஷாஹித் அப்ரிடி
    ஆசிய கோப்பை சர்ச்சைக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய ஷாஹித் அப்ரிடி

    "அச்சுறுத்தலை தாண்டி தான் இந்தியா வந்தோம்" : ஆசிய கோப்பை சர்ச்சைக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய ஷாஹித் அப்ரிடி

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 21, 2023
    02:03 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த காலத்தில் இந்தியாவுக்கு விளையாட வந்தபோது, மும்பையில் ஒருவரால் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறியுள்ளார்.

    2023 செப்டம்பரில் ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து வருவதால், போட்டித் தொடரை நடுநிலையான நாட்டிற்கு மாற்றுவது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசித்து வருகிறது.

    ஆனால் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலர் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி கடந்த காலம் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்து, இந்திய அணி பாகிஸ்தான் வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    ஷாஹித் அப்ரிடி

    ஷாஹித் அப்ரிடி பேசியதன் முழு விபரம்

    தோகாவில் நடந்த லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் மத்தியில் ஊடகவியலாளர்களுடன் உரையாடிய ஷாஹித் அப்ரிடி, கடந்த காலத்தில் இந்திய சுற்றுப்பயணத்தின் போது தனது அணியை மும்பையைச் சேர்ந்த ஒருவர் அச்சுறுத்தினார் என்று கூறினார்.

    இருந்தாலும் தாங்கள் தைரியமாக இந்தியா வந்து விளையாடினோம் என்று கூறிய ஷாஹித் அப்ரிடி, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வந்தால், நாங்கள் முழு மனதுடன் அவர்களை வரவேற்று பாதுகாப்பாக பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

    இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் உறவுள் குறித்து விரிவாக பேசிய அப்ரிடி, 2005 இல் பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்தபோது யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங்குடன் உணவகங்கள் மற்றும் ஷாப்பிங்கிற்கு சென்ற இனிமையான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கிரிக்கெட்

    ஸ்லெட்ஜிங் செய்ததற்கு இப்படியொரு பதிலடி கொடுத்தாரா சச்சின்? பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம் சச்சின் டெண்டுல்கர்
    ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் : புதிய சாதனை படைக்க உள்ள ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்
    விராட் கோலி 110 சதங்கள் அடிப்பார் : பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சார் சோயிப் அக்தர் ஆருடம் விளையாட்டு
    இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஒருநாள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025