Page Loader
ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த இந்தியர்; அபிஷேக் ஷர்மா சாதனை
ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்து அபிஷேக் ஷர்மா சாதனை

ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த இந்தியர்; அபிஷேக் ஷர்மா சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Apr 13, 2025
08:37 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2025 தொடரில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 12) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இந்தியர் ஒருவர் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை படைத்தார். 23 வயதே அபிஷேக் ஷர்மா, இந்த சாதனை மூலம் 2020 ஆம் ஆண்டில் கே.எல்.ராகுலின் 132* ரன்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்தார். அபிஷேக் மற்றும் கே.எல்.ராகுலைத் தொடர்ந்து ஷுப்மன் கில் (129), ரிஷப் பண்ட் (128*) மற்றும் முரளி விஜய் (127) ஆகியோர் உள்ளனர்.

போட்டி

போட்டி ஹைலைட்ஸ்

போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 246 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் மற்றும் அவரது தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ஆகியோர் கூட்டாக 171 ரன்கள் குவித்தனர். அபிஷேக் ஷர்மா 141 மற்றும் டிராவிஸ் ஹெட் 66 ரன்களும் எடுத்ததன் மூலம் 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் எஸ்ஆர்எச் வெற்றி பெற்றது.