NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் : 255 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு!
    அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் : 255 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு!
    1/2
    விளையாட்டு 0 நிமிட வாசிப்பு

    அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் : 255 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 05, 2023
    06:24 pm
    அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் : 255 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு!
    அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக்கில் 255 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு

    ஜெர்மனியின் பெர்லினில் ஜூன் 17 முதல் 25 வரை நடைபெறவுள்ள சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைக்கால விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் 255 பேர் கொண்ட குழு பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பிரிவுகளில் 198 விளையாட்டு வீரர்கள், 57 பயிற்சியாளர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுகள் அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகும். பெர்லினில் 190 நாடுகளில் இருந்து மொத்தம் 700 விளையாட்டு வீரர்கள் 26 பிரிவுகளில் போட்டியிடுவார்கள். இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் ஜூன் 12 ஆம் தேதி பெர்லினுக்குப் புறப்படுவதற்கு முன், ஜூன் 7 முதல் 11 வரை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஆயத்த முகாமில் பங்கேற்பார்கள்.

    2/2

    சிறப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களுக்கு வழியனுப்பு விழா

    வியாழன் அன்று (ஜூன் 8) ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சிறப்பு ஒலிம்பிக் பாரத் குழுவினருக்கு சிறப்பு அனுப்பும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் விவகார அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் பாடகர் சோனு நிகம் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். முன்னணி சமூக ஆர்வலரும், சிறப்பு ஒலிம்பிக் பாரத் தலைவருமான மல்லிகா நட்டா, இந்த முறை பெர்லினில் இருந்து இந்தியா 150க்கும் மேற்பட்ட பதக்கங்களுடன் திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஒலிம்பிக்
    இந்திய அணி
    இந்தியா

    ஒலிம்பிக்

    2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்? இந்தியாவை காட்டி பேரம் பேசும் ஐசிசி! கிரிக்கெட் செய்திகள்
    'ஐபிஎல்லில் விளையாடுவேன்' : ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஜாலி பேட்டி ஐபிஎல்
    தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி! மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்! மத்திய அரசு
    பாரிஸ் ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட தகுதிப் போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்கு தடை உலக கோப்பை

    இந்திய அணி

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் கூட்டாக அறிக்கை! மல்யுத்த வீரர்கள்
    இந்திய அணிக்கு மூன்று விதமான ஜெர்சிக்களை அறிமுகம் செய்தது பிசிசிஐ! பிசிசிஐ
    ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா! ஆசிய கோப்பை

    இந்தியா

    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்  மல்யுத்த வீரர்கள்
    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது சிபிஐ
    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் பீகார்
    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் கல்லூரி
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023