
0.01 வினாடியில் 39 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை இழந்த தமிழக வீராங்கனை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் ஆர் வித்யா ராம்ராஜ், திங்களன்று (செப்டம்பர் 12) நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 5ல் பெண்களுக்கான 400மீ தடை ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.
இதில், வித்யா 55.43 வினாடிகளில் இலக்கை கடந்ததன் மூலம், மயிரிழையில் பிடி உஷாவின் 39 ஆண்டு கால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
முன்னதாக, 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 400மீ தடை ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் 55.42 வினாடிகளில் ஓடி பிடி உஷா நான்காவது இடத்தை பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு பேசிய வித்யா ராம்ராஜ், சீனாவில் விரைவில் தொடங்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பிடி உஷாவின் சாதனையை நிச்சயம் முறியடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
embed
Twitter Post
"I will break the PT Usha's record at the Asian Games." Vithya Ramraj She ran 52.40s in 400m yesterday (IGP 5 day 1) and she ran 400m hurdles today in a brilliant pace to clock 55.43s. She was just a 0.01s short of PT Usha's record. #IndianAthletics #IndianGrandPrix... pic.twitter.com/wnCEysYhQe— nnis (@nnis_sports) September 11, 2023