NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நிலவை ஆராய்ச்சி செய்ய உலக நாடுகள் போட்டியிடுவது ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலவை ஆராய்ச்சி செய்ய உலக நாடுகள் போட்டியிடுவது ஏன்?
    நிலவை நாம் ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்?

    நிலவை ஆராய்ச்சி செய்ய உலக நாடுகள் போட்டியிடுவது ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 13, 2023
    09:33 am

    செய்தி முன்னோட்டம்

    2019-ல் தோல்வியடைந்த சந்திராயன்-2வின் தொடர்ச்சியாக நாளை விண்ணில் பாயவிருக்கிறது சந்திராயன்-3. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளுக்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாக நிலவை மையப்படுத்திய தங்களது விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கின்றன.

    ஆனால், முதலில் நிலவை ஏன் நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும், அதிலிருந்து நம்மால் என்ன தெரிந்துகொள்ள முடியும்?

    பூமியில் உருவாகத் தொடங்கிய பிறகு தற்போது இருக்கும் அளவை அடைவதற்கு முன், செவ்வாய் கிரகத்தின் அளவுடைய துணைக் கோள் ஒன்று பூமியின் மேல் மோதியிருக்கிறது.

    அந்த மோதலைத் தொடர்ந்து, அப்போதைய பூமியின் சில பகுதிகளும், பூமியின் மேல் மோதிய துணைக் கோளின் சில பகுதிகளும் சேர்ந்து நிலவை உருவாக்கியிருக்கின்றன. இந்த நிகழ்வு நடைபெற்று கிட்டத்தட்ட 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

    சந்திரன்

    தொடக்கக்கால சூரிய குடும்பத்தின் எச்சம், சந்திரன்: 

    இந்த 4.5 பில்லியன் ஆண்டுகளில் பூமியின் மீது பல்வேறு விண்கற்கள் மோதி, வளிமண்டலம் உருவாகி அதன் பொருட்டு பல்வேறு மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது பூமி.

    ஆனால், நிலவானது இந்த 4.5 ஆண்டுகளில் பெரிய மாற்றங்கள் ஏதுமின்ற அப்போது எப்படி இருந்ததோ, அப்படியே இப்போதும் இருப்பதாகக் கருதுகின்றனர் விஞ்ஞானிகள்.

    நிலவைப் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம், அப்போது என்ன விதமான பொருட்கள் மற்றும் துகள்களை கொண்டு நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் உருவாயின் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என நம்புகிறார்கள்.

    அடிப்படையில், சூரிய குடும்பத்தின் தொடக்கக்காலம் எப்படி இருந்தது என்பதன் சாட்சியாக சுற்றி வந்து கொண்டிருக்கிறது நிலவு. இத்துடன், தங்களது தொழில்நுட்ப மேம்பாடுகளை உலகிற்கு பறைசாற்றவும், விண்வெளித் திட்டங்களை உலகநாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரன்
    விண்வெளி
    இந்தியா
    அறிவியல்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    சந்திரன்

    நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்! விண்வெளி
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? பூமி
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி

    விண்வெளி

    தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை! உலகம்
    விண்ணில் செலுத்தப்பட்டு 33-வது ஆண்டைக் கொண்டாடும் ஹபுள் தொலைநோக்கி!  நாசா
    பூமிக்கு நெருங்கும் ஆபத்து: மெகா சைஸ் விண்கல் 62 ,723 கீ.மி வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது நாசா
    பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் புதிய ஆபத்து.. கண்டறிந்த விஞ்ஞானிகள்!  தொழில்நுட்பம்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 49 கொரோனா பாதிப்பு கொரோனா
    தமிழகத்தில் ரூ.54,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கும் இந்தியன் ஆயில் தமிழ்நாடு
    ஏ.சி ரயில் பெட்டிகளின் கட்டணம் 25% குறைக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு இந்திய ரயில்வே
    நிலையான வைப்பு நிதிக்கு எதிராக பெறப்படும் கடனில் என்னென்ன நன்மைகள்? கடன்

    அறிவியல்

    பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது   இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது நாடாளுமன்றம்
    லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார் உலகம்
    பால்வெளி மண்டலத்தில் தோன்றிய நியூட்ரினோவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025