NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / AI தொழில்நுட்பத்தையும் முதன்மையான அச்சுறுத்தலாகக் கருத வேண்டும்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    AI தொழில்நுட்பத்தையும் முதன்மையான அச்சுறுத்தலாகக் கருத வேண்டும்!
    மனித குலத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்குமா AI தொழில்நுட்பம்?

    AI தொழில்நுட்பத்தையும் முதன்மையான அச்சுறுத்தலாகக் கருத வேண்டும்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 31, 2023
    11:08 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்களது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்பாட்டான சாட்ஜிபிடி-யை வெளியிட்டது ஓபன்ஏஐ நிறுவனம்.

    அதனைத் தொடர்ந்து கடந்த ஏழு மாதங்களில் பல்வேறு நிறுவனங்கள் AI போட்டியில் நுழைந்துவிட்டன். உலகம் முழுவதும் AI தொழில்நுட்பத்துடன் கூடிய பல்வேறு கருவிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டிருக்கின்றன.

    குறைந்த காலத்திலேயே மக்களிடம் அதீத வரவேற்பைப் பெற்றிருக்கும் AI-க்கள் வருங்காலத்திற்கு மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக இருக்கும் என எலான் மஸ்க் உட்பட உலகின் பல முக்கிய நபர்கள் பேசி வருகிறார்கள்.

    இதனைத் தொடர்ந்து AI ஆராய்ச்சிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என வெளிப்படையான அறிக்கையில் எலான் மஸ்க் உட்பட பலரும் கையெழுத்திட்டு இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    செயற்கை நுண்ணறிவு

    புதிய கையெழுத்து முயற்சி: 

    இதனைத் தொடர்ந்து தற்போது AI குறித்த ஆபத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என புதிய ஒற்றை வாக்கிய வெளிப்படை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

    AI சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், AI நிறுவனங்களின் நிறுவனர்கள் என அனைவரும் அந்த அறிக்கைக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கையெழுத்திட்டு வருகிறார்கள்.

    நோய்ப் பரவல் மற்றும் அணு ஆயதப் போரைப் போல செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் மனித குலத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. எனவே, அவற்றையும் முதன்மையான அச்சுறுத்தலாகக் கருத வேண்டும், என அந்த ஒற்றை வாக்கிய வெளிப்படை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கைக்கு ஆதரவாக ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆட்மேன் உட்பட 350 முக்கிய நபர்கள் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    சாட்ஜிபிடி

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    செயற்கை நுண்ணறிவு

    'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்!  சாட்ஜிபிடி
    'GPT' என்ற சுருக்கத்தின் ட்ரேடுமார்க்கிற்கு விண்ணப்பித்திருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்!  சாட்ஜிபிடி
    AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?  மைக்ரோசாஃப்ட்
    'சந்தைப்படுத்துதலுக்கு AI-யில் முதலீடு செய்ய நாங்கள் தயார்' - புதிய ஆய்வு!  வணிகம்

    சாட்ஜிபிடி

    விரைவில் AI மாற்று மொழிகளிலும்.. சென்னை IIT இயக்குனர் காமகோட்டி தகவல் தொழில்நுட்பம்
    கூகுள் பார்ட் v/s OpenAI சாட்ஜிபிடி - சிறந்தவை எது? செயற்கை நுண்ணறிவு
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? செயற்கை நுண்ணறிவு
    ChatGPT பிளஸ் சந்தாவை பரிசாக வழங்கும் நிறுவனம்! காரணம் என்ன? பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025