NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆன்லைன் மோசடி.. ரூ.42 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆன்லைன் மோசடி.. ரூ.42 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!
    ஆன்லைன் மோசடியில் சிக்கிய மென்பொறியாளர்

    ஆன்லைன் மோசடி.. ரூ.42 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 15, 2023
    04:24 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆன்லைனில் தொடர்ந்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலான நேரங்களின் ஆன்லைன் பயனர்களின் பேராசையும், தற்காப்பின்மையுமே மோசடி சம்பவங்களுக்கு வழிவகுகின்றன.

    தற்போதும் ஹரியானாவில் உள்ள குருகிராமில் மென்பொருள் பொறியாளர் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்திருக்கிறது ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று.

    கடந்த மார்ச் மாதம் பகுதி நேர வேலை அளிப்பதாகக் கூறி, மோசடி செய்யப்பட்ட நபரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டிருக்கிறது மோசடி கும்பல் ஒன்று.

    முதலில் யூடியூப் காணொளிகளை லைக் செய்தால் போதும் எனக் கூறியிருக்கின்றன. பின்னப் டெலிகிராமில் ஒரு குழுவில் இணைந்திருக்கின்றனர். இந்த செயல்பாடுகளை திவ்யா என்ற பெயரில் ஒருவர் மோசடி செய்யப்பட்ட நபரிடம் செய்திருக்கிறார்.

    ஆன்லைன் மோசடி

    புதிய வகையில் மோசடி: 

    டெலிகிராமில் இணைந்த பின்னர் அந்தக் குழுவில் இருந்தவர்கள் வைத்து நிறைய முதலீடு செய்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியிருக்கின்றனர்.

    இதனை நம்பிய மென்பொறியாளர் தன்னுடைய கணக்கில் இருந்து, தன்னுடைய மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ.42,31,000-த்தை அனுப்பியிருக்கிறார்.

    மென்பொறியாளரிடம், அவர் 69 லட்சம் ரூபாய் லாபம் அடைந்திருக்கிறார், ஆனால் அந்தப் பணத்தை வெளியே எடுக்க மேலும் ரூ.11,000 அனுப்ப வேண்டும் என அவர்கள் கேட்டபோது எச்சரிக்கையாகி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பணத்தை மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.

    ஆன்லைன் மூலம் வரும் வேலைவாய்ப்புகளை கவனத்தோடு அனுக வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் படித்தவர்களே இது போன்று மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் மோசடி

    சமீபத்திய

    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ
    மாம்பழம் நல்லதுதான், ஆனால் இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள் உடல் ஆரோக்கியம்
    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025