NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட ஏழாவது நபர் 'குணமானார்' என மருத்துவர்கள் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட ஏழாவது நபர் 'குணமானார்' என மருத்துவர்கள் அறிவிப்பு

    எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட ஏழாவது நபர் 'குணமானார்' என மருத்துவர்கள் அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 19, 2024
    09:19 am

    செய்தி முன்னோட்டம்

    மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸான எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஒருவர் நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெர்மனியை சேர்ந்த அந்த நபருக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

    இதுநாள் வரையில் இந்த ஸ்டெம் செல் மருத்துவமுறை, எச்.ஐ.வி மற்றும் லுகேமியா இரண்டையும் கொண்டவர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக கருதப்பட்டது.

    எனவே, பெரும்பாலான மக்களுக்கு இது ஒரு சிகிச்சை விருப்பமான தேர்வாக இல்லை.

    சிகிச்சை

    லுகேமியாவுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை

    முன்னதாக லுகேமியால் பாதிக்கப்பட்ட 'பெர்லின் நோயாளி'யின் என்று அழைக்கப்பட்ட திமோதி ரே பிரவுன் என்பவருக்கு கடந்த 2008 இல் இந்த ஸ்டெம் செல் தெரபி செய்யப்பட்டது.

    ஆனால், 2020 இல், திமோதி புற்றுநோயால் இறந்தார். எனினும் அவருக்கு HIV தாக்கம் இல்லை.

    தற்போதுள்ள இந்த 60 வயது நபருக்கு எச்ஐவி இருப்பது 2009இல் கண்டறியப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு அவருக்கு ரத்தப் புற்றுநோய்க்கான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இந்த சிகிச்சையால் மரணம் ஏற்படும் அபாயம் 10 சதவீதம் வரை மட்டுமே உள்ளது.

    அடிப்படையில் இந்த சிகிச்சையானது ஒரு நபரின் முழு நோயெதிர்ப்பு மண்டலத்தையும் மாற்றுகிறது.

    விவரங்கள் 

    நோயாளி குணமடைவார் என்ற நம்பிக்கை உள்ளது என மருத்துவர்கள் உறுதி

    சில காலத்திற்கு பிறகு அவர் ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தியதாக கூறியுள்ளார்.

    இப்போது, அவரது இரத்தத்தில் எச்.ஐ.வி. தாக்கம் இருப்பது கண்டறிந்து ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எச்.ஐ.வி மற்றும் புற்றுநோய் இரண்டிலிருந்தும் விடுபட்டது தெரியவந்துள்ளது.

    பெர்லினில் உள்ள அறக்கட்டளை பல்கலைக்கழக மருத்துவமனையில் இந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் கிறிஸ்டியன் கேப்லரின் கூற்றுப்படி, வைரஸின் ஒவ்வொரு தடயமும் அகற்றப்பட்டது என்பது இன்னும் முழுமையாக அறியப்படவில்லை.

    இருப்பினும், இந்த நபர் எச்.ஐ.வி.யிலிருந்து விடுபடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    விவரங்கள்

    இதுவரை எத்தனை நோயாளிகள் குணமடைந்துள்ளனர்? 

    இன்றுவரை உள்ள பதிவுகளின்படி, எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட 6 பேர் மட்டுமே இந்த ஆபத்தான நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

    இந்த நோயாளியும் குணமடைந்தால், எச்ஐவியில் இருந்து முழுமையாக குணமடைந்த ஏழாவது நபர் ஆவார்.

    இந்த வழக்கு வெற்றிகரமாக இருந்தால், எதிர்காலத்தில் ஒரு பெரிய, சிறந்த நன்கொடையாளர்களை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

    இந்த புதிய வழக்கு அனைத்து வகையான எச்.ஐ.வி நோயாளிகளுக்கும் சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இது நம்பிக்கைக்குரியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எய்ட்ஸ்

    சமீபத்திய

    போர் நிறுத்தத்திற்கு பிறகு ஒரே நாளில் இந்திய பங்குச் சந்தையில் 3,000 புள்ளிகள் உயர்வு பங்குச் சந்தை
    ஐபிஎல் 2025: மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியாகக்கூடும் ஐபிஎல் 2025
    மின்சார வாகன அசெம்பிளி ஆலையை நிறுவ டெஸ்லா மகாராஷ்டிராவில் இடம் தேடுகிறது டெஸ்லா
    இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் சந்திரன்

    எய்ட்ஸ்

    இன்று, மார்ச் 1, பாகுபாடுகள் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது உலகம்
    உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்: அதன் முக்கியத்துவம், காரணங்கள் மற்றும் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள் வைரஸ்
    உலக எய்ட்ஸ் தினம் 2023: எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பற்றிய மூடநம்பிக்கைகள் வைரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025