NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தங்கள் ஊழியர்கள் AI கருவிகளைப் பயன்படுத்த தடை விதித்தது சாம்சங்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கள் ஊழியர்கள் AI கருவிகளைப் பயன்படுத்த தடை விதித்தது சாம்சங்! 
    ஊழியர்கள் AI கருவிகளைப் பயன்படுத்த தடை விதித்த சாம்சங்

    தங்கள் ஊழியர்கள் AI கருவிகளைப் பயன்படுத்த தடை விதித்தது சாம்சங்! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 02, 2023
    03:28 pm

    செய்தி முன்னோட்டம்

    சாம்சங் நிறுவனம் வேலை செய்யும் இடத்தில் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஜெனரேட்டிவ் AI கருவிகளைப் பயன்படுத்த தங்கள் ஊழியர்களுக்கு தடை விதித்திருக்கிறது.

    இது குறித்து ஊழியர்களுக்கு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    அந்த அறிவிப்பில், அலுவலக வேலைகளுக்குப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன், மடிக்கணினி மற்றும் கணினி ஆகியவற்றில் AI கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    மேலும், ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட சாதனங்களில் AI-யை பயன்படுத்தினாலும், அவற்றில் அலுவலக வேலை சார்ந்த தகவல்கள் எதையும் அளிக்க வேண்டாம் என சாம்சங் அறிவுறுத்தியிருக்கிறது.

    இந்த விதிமுறைகளை மீறும் ஊழியர்கள் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்திருக்கிறது அந்நிறுவனம்.

    தகவல் பாதுகாப்பு காரணங்களைக் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தங்கள் அறிவிப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது.

    சாம்சங்

    AI கருவிகளுக்குத் தடை: 

    AI கருவிகளில் ஊழியர்கள் வழங்கும் தகவல்கள் நிறுவனத்திற்கு வெளியே இருக்கும் வேறு நிறுவனங்களின் சர்வர்களில் சேமிக்கப்படுகின்றன.

    இதனால், தங்கள் நிறுவனத்தின் தகவல்கள் வெளியே கசிவதற்கோ அல்லது திருடப்படுவதற்கோ வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறது சாம்சங்.

    சாம்சங் மட்டுமல்ல, ஜேபி மோர்கன்சேஸ் வங்கி, பேங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் சிட்டிக்ரூப் ஆகிய நிறுவனங்களும் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ AI சாட்பாட்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்திருக்கின்றன.

    மேலும், ஊழியர்கள் பயன்படுத்துவதற்கான சில AI கருவிகளை தாங்களே உருவாக்கி வருவதாகவும், ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்து வருவதாகவும், அதுவரை AI கருவிகளை பயன்படுத்துவதை தடை செய்வதகாவும் குறிப்பிட்டிருக்கிறது சாம்சங்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாம்சங்
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் சந்திரன்
    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
    ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை

    சாம்சங்

    Samsung S23 Ultra அறிமுகம்! முன்பதிவு செய்வோருக்கு இப்படி ஒரு சலுகையா? தொழில்நுட்பம்
    Samsung Galaxy S23 விட S22 சிறந்த போனா? அதிரடியாக விலை குறைப்பு; இந்தியா
    Samsung Galaxy S23: முன்பதிவில் ஒரே நாளில் ரூ. 1400 கோடி வசூல்! இந்தியா
    ஐபோனை மிஞ்சிய சாம்சங் Galaxy S23 அல்ட்ரா! கேமரா மூலமாக நிலாவை நேரில் காட்டிய யூடிபர்; வைரலான ட்வீட்

    செயற்கை நுண்ணறிவு

    AI-யின் முக்கியத்தை குறிப்பிட்டு வித்தியாசமாக விளம்பரம் செய்த சோமேட்டோ! சோமாட்டோ
    ChatGPT Plus கட்டணம் இந்தியாவில்... ChatGPT 4 இலவசம்! எது சிறந்தது? சாட்ஜிபிடி
    செயற்கை நுண்ணறிவு என்பது கடவுளின் மற்றொரு பரிணாமம்? புதிய மதங்கள் உருவாகலாம் தொழில்நுட்பம்
    விரைவில் AI மாற்று மொழிகளிலும்.. சென்னை IIT இயக்குனர் காமகோட்டி தகவல் தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025