NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இஸ்ரோவின் சந்திரயான் திட்டங்களுக்கு உதவிய நாமக்கல் மாவட்டம், எப்படி?
    இஸ்ரோவின் சந்திரயான் திட்டங்களுக்கு உதவிய நாமக்கல் மாவட்டம், எப்படி?
    தொழில்நுட்பம்

    இஸ்ரோவின் சந்திரயான் திட்டங்களுக்கு உதவிய நாமக்கல் மாவட்டம், எப்படி?

    எழுதியவர் Prasanna Venkatesh
    September 03, 2023 | 02:54 pm 1 நிமிட வாசிப்பு
    இஸ்ரோவின் சந்திரயான் திட்டங்களுக்கு உதவிய நாமக்கல் மாவட்டம், எப்படி?
    இஸ்ரோவின் சந்திரயான் திட்டங்களுக்கு உதவிய நாமக்கல் மாவட்டம்

    கடந்த ஆகஸ்ட் 23ம் நாள் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3யை தரையிறக்கியதன் மூலம், நிலவின் தென்துருவப் பகுதியில் முதன் முதலில் விண்கலத்தை தரையிறக்கிய நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா. இந்தத் தரையிறக்கத்திற்கு தமிழக விஞ்ஞானிகளின் பங்களிப்பைத் தவிர்த்து தமிழகத்தின் மாவட்டம் ஒன்றும் பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறது. சந்திரயான் திட்டங்களின் தரையிறக்கத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கான சோதனை முயற்சிகளின் போது நிலவின் மேற்பரப்பில் இருப்பது போலான தரைப்பரப்பை பூமியில் உருவாக்கினர் இஸ்ரோ விஞ்ஞானிகள். அதற்காக நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மணலை அமெரிக்காவிடமிருந்து விலை கொடுத்து வாங்கியிருக்கிறது இஸ்ரோ. சுமார் 10 கிலோ மணலை கிலோ 150 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,000) விலையில் வாங்கியிருக்கிறது இஸ்ரோ.

    தமிழக மாவட்டத்தின் பங்கு: 

    ஆனால், தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்வதற்கு குறைந்தபட்சம் 60 முதல் 70 கிலோ மணலாவது இஸ்ரோவிற்கு தேவைப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான், நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கக்கூடிய சில கிராமங்களில், நிலவின் மணலை ஒத்த பண்புகளை உடைய மணல் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கக்கூடிய சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை கிராமங்களிலிருந்து சந்திரயான் திட்டங்களுக்குத் தேவையான மணலை உரிய அனுமதி பெற்று எடுத்திருக்கின்றனர். பின்னர் இந்த மணலை நிலவின் மணல் மாதிரியைப் போல உருவாக்கி, அதனைக் கொண்ட பூமியில் சந்திரயான் திட்டங்களுக்கான சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்திருக்கிறது இஸ்ரோ.

    ஏன் நாமக்கல் மாவட்டத்திலிருக்கும் மணலைப் பயன்படுத்தினார்கள்? 

    ஏன் நிலவுத் திட்டத்திற்கான முன்னோட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமங்களிலிருந்து எடுக்கப்பட்ட மணலைப் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெரியார் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். நிலவில், குறிப்பாக அதன் தென் துருவப் பகுதியில் இருக்கும் மணலானது ஆனார்த்தோசைட் (Anorthosite) வகையைச் சேர்ந்தது. இந்த வகை மணலானது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட பாறைகளால் ஆனது. மேலும், அதீத பிரதிபலிப்புத் தன்மையைக் கொண்டது. நாமக்கல் மாவட்ட கிராமங்களில் உள்ள மணலும் கிட்டத்தட்ட இதே பண்புகளையே கொண்டிருந்திருக்கிறது. எனவே, அவற்றை நிலவின் மணல் போலத் தயாரித்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும், இந்த மணல் தயாரிப்பு முறைக்கு 2020-ம் ஆண்டிலேயே இஸ்ரோ காப்புரிமையையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சந்திரயான்
    இஸ்ரோ
    தமிழ்நாடு

    சந்திரயான்

    சந்திரனில் உள்ள புள்ளிகளுக்கு எவ்வாறு பெயரிடப்படுகிறது?  சந்திரயான் 3
    சந்திரயான் 4: நிலவின் தண்ணீரின் இருப்பை ஆய்வு செய்ய ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா இஸ்ரோ
    சந்திரயான் 3 வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய எம்எஸ் தோனி மகள்; வைரலாகும் காணொளி இஸ்ரோ
    சந்திரயான்-3 பின்னால் இருக்கும் இஸ்ரோ குழுவை பற்றி ஒரு பார்வை சந்திரயான் 3

    இஸ்ரோ

    துயில் கொள்ளவிருக்கும் பிரஞ்யான் ரோவர்.. முடிவுக்கு வரும் சந்திரயான் 3 திட்டம்? சந்திரயான் 3
    ஆதித்யா L1 விண்கலம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் வாழ்த்துகள் ஆதித்யா L1
    இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை! விண்வெளி
    சந்திரயான் 3இன் அடுத்த சாதனை: நிலவில் சதம் அடித்தது பிரக்யான் ரோவர்  சந்திரயான் 3

    தமிழ்நாடு

    சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார்  உதயநிதி ஸ்டாலின்
    தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு - மத்திய இணையமைச்சர் பாராட்டு மத்திய அரசு
    சனாதன ஒழிப்பை நோக்கமாக கொள்ள வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023