NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இஸ்ரோவின் சந்திரயான் திட்டங்களுக்கு உதவிய நாமக்கல் மாவட்டம், எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரோவின் சந்திரயான் திட்டங்களுக்கு உதவிய நாமக்கல் மாவட்டம், எப்படி?
    இஸ்ரோவின் சந்திரயான் திட்டங்களுக்கு உதவிய நாமக்கல் மாவட்டம்

    இஸ்ரோவின் சந்திரயான் திட்டங்களுக்கு உதவிய நாமக்கல் மாவட்டம், எப்படி?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 03, 2023
    02:54 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆகஸ்ட் 23ம் நாள் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3யை தரையிறக்கியதன் மூலம், நிலவின் தென்துருவப் பகுதியில் முதன் முதலில் விண்கலத்தை தரையிறக்கிய நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா.

    இந்தத் தரையிறக்கத்திற்கு தமிழக விஞ்ஞானிகளின் பங்களிப்பைத் தவிர்த்து தமிழகத்தின் மாவட்டம் ஒன்றும் பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறது.

    சந்திரயான் திட்டங்களின் தரையிறக்கத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கான சோதனை முயற்சிகளின் போது நிலவின் மேற்பரப்பில் இருப்பது போலான தரைப்பரப்பை பூமியில் உருவாக்கினர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

    அதற்காக நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மணலை அமெரிக்காவிடமிருந்து விலை கொடுத்து வாங்கியிருக்கிறது இஸ்ரோ. சுமார் 10 கிலோ மணலை கிலோ 150 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,000) விலையில் வாங்கியிருக்கிறது இஸ்ரோ.

    தமிழகம்

    தமிழக மாவட்டத்தின் பங்கு: 

    ஆனால், தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்வதற்கு குறைந்தபட்சம் 60 முதல் 70 கிலோ மணலாவது இஸ்ரோவிற்கு தேவைப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் தான், நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கக்கூடிய சில கிராமங்களில், நிலவின் மணலை ஒத்த பண்புகளை உடைய மணல் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

    நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கக்கூடிய சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை கிராமங்களிலிருந்து சந்திரயான் திட்டங்களுக்குத் தேவையான மணலை உரிய அனுமதி பெற்று எடுத்திருக்கின்றனர்.

    பின்னர் இந்த மணலை நிலவின் மணல் மாதிரியைப் போல உருவாக்கி, அதனைக் கொண்ட பூமியில் சந்திரயான் திட்டங்களுக்கான சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்திருக்கிறது இஸ்ரோ.

    சந்திரயான்

    ஏன் நாமக்கல் மாவட்டத்திலிருக்கும் மணலைப் பயன்படுத்தினார்கள்? 

    ஏன் நிலவுத் திட்டத்திற்கான முன்னோட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமங்களிலிருந்து எடுக்கப்பட்ட மணலைப் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெரியார் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    நிலவில், குறிப்பாக அதன் தென் துருவப் பகுதியில் இருக்கும் மணலானது ஆனார்த்தோசைட் (Anorthosite) வகையைச் சேர்ந்தது. இந்த வகை மணலானது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட பாறைகளால் ஆனது. மேலும், அதீத பிரதிபலிப்புத் தன்மையைக் கொண்டது.

    நாமக்கல் மாவட்ட கிராமங்களில் உள்ள மணலும் கிட்டத்தட்ட இதே பண்புகளையே கொண்டிருந்திருக்கிறது. எனவே, அவற்றை நிலவின் மணல் போலத் தயாரித்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும், இந்த மணல் தயாரிப்பு முறைக்கு 2020-ம் ஆண்டிலேயே இஸ்ரோ காப்புரிமையையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான்
    இஸ்ரோ
    தமிழ்நாடு

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    சந்திரயான்

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான் 3
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான் 3
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான் 3
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான் 3

    இஸ்ரோ

    சந்திரயான் 3: என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கும்.. திட்டச் சுருக்கம்! சந்திரயான் 3
    இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கு ஆன செலவு எவ்வளவு? சந்திரயான்
    சந்திரயான்-3 பின்னால் இருக்கும் இஸ்ரோ குழுவை பற்றி ஒரு பார்வை சந்திரயான் 3
    புதிய முதலீடுகளை ஈர்க்குமா சந்திரயான் 3யின் வெற்றி? சந்திரயான் 3

    தமிழ்நாடு

    384வது சென்னை தினம் - வரலாற்று சிறப்புகள் ஓர் பார்வை சென்னை
    உணவுப்பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு - 100 கிலோவிற்கும் மேலான குட்கா பறிமுதல்  சென்னை
    6 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025