Page Loader
ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை
போலி ரீசார்ஜ் திட்டத்தை நம்ப வேண்டாம்.. மத்திய அரசு எச்சரிக்கை

ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை

எழுதியவர் Siranjeevi
Mar 27, 2023
10:14 am

செய்தி முன்னோட்டம்

தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல், விஐ போன்ற நிறுவனங்கள் பல ரீசார்ஜ் ஆஃபர்களை வழங்கி வந்தாலும், சமூக ஊடகங்களில் ரூ.239 ரீசார்ஜ் திட்டத்தை மத்திய அரசு இலவசமாக வழங்கப்போவதாக ஒரு செய்தி வேகமாக பரவி வந்தது. அந்த ரீசார்ஜ் திட்டத்தை இலவசமாக பெற லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த செய்தி பற்றி மத்திய அரசின் நிறுவனமான PIB உண்மையை கண்டறிந்து இந்த செய்தி போலியான ஒரு செய்தி, இதை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது. இது போன்ற போலி தகவல் போலி வங்கி தகவல்கள் வேகமாக பரவி வருவதை பற்றி PIB அடிக்கடி மக்களை எச்சரித்தும் வருகின்றது.

ட்விட்டர் அஞ்சல்

ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் போலியானது - எச்சரித்த PIB