NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / AI உதவியுடன் உருவாக்கப்படும் புகைப்படங்களைக் கண்டறிய புதிய கருவியை உருவாக்கி வரும் ஓபன்ஏஐ
    அடுத்த செய்திக் கட்டுரை
    AI உதவியுடன் உருவாக்கப்படும் புகைப்படங்களைக் கண்டறிய புதிய கருவியை உருவாக்கி வரும் ஓபன்ஏஐ
    AI உதவியுடன் உருவாக்கப்படும் புகைப்படங்களைக் கண்டறிய புதிய கருவியை உருவாக்கி வரும் ஓபன்ஏஐ

    AI உதவியுடன் உருவாக்கப்படும் புகைப்படங்களைக் கண்டறிய புதிய கருவியை உருவாக்கி வரும் ஓபன்ஏஐ

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 18, 2023
    03:17 pm

    செய்தி முன்னோட்டம்

    உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்கி வெளியிட்டதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உருவாக்கிய உள்ளடக்கங்களைக் கண்டறிவதற்கான புதிய கருவிகளை சோதனை செய்து வருகிறது ஓபன்ஏஐ நிறுவனம்.

    கடந்த ஆண்டு எழுத்தை அடிப்படையாகக் கொண்ட சாட்ஜிபிடி மற்றும் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட டால்-இ உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை வெளியிட்டது அந்நிறுவனம்.

    செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைக் கொண்டு போலியான மற்றும் தவறான புகைப்படங்களை இணையதள பயனாளர்கள் அதிகம் உருவாக்கி வருவதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட புகைப்படம் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய புதிய கருவிகளை தங்கள் நிறுவனத்திற்குள்ளேயே சோதனை செய்து வருகிறது ஓபன்ஏஐ நிறுவனம்.

    ஓபன்ஏஐ

    தலைமை தொழில்நுட்ப அதிகாரி சொல்வது என்ன? 

    ஒரு குறிப்பிட்ட புகைப்படம் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்டதா என்பதனை தங்களுடைய இந்தப் புதிய கருவியானது 99% சரியான அடையாளம் காணுவதாக ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான மிரா முராதி தெரிவித்துள்ளார்.

    இந்தப் புதிய கருவியை அந்நிறுவனம் எப்போது பொதுப் பயனாளர்களின் பயன்பாட்டிற்கு வெளியிடும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

    இந்த ஆண்டு தொடக்கத்தில், ஜனவரி மாதம் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை கண்டறியும் வகையிலான கருவி ஒன்றை வெளியிட்டது ஓபன்ஏஐ.

    ஆனால், அந்தக் கருவியின் கண்டறியும் திறனானது எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததைத் தொடர்ந்து, அதனை பயனாளர்களின் பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது. மிகவும் நம்பகமான திறன் வாய்ந்த கருவியை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது அந்நிறுவனம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    சாட்ஜிபிடி
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    செயற்கை நுண்ணறிவு

    லென்ஸ் இல்லாத AI கேமராவை உருவாக்கிய பொறியாளர்.. எப்படி இயங்குகிறது? தொழில்நுட்பம்
    சாட்ஜிபிடியை கூர்ந்து கவனித்து வருகிறேன்.. டிம் கும் சொன்னது என்ன? ஆப்பிள்
    AI தொழில்நுட்பத்தைக் கொண்டு சேவையை மேம்படுத்தும் ஸோமாட்டோ தொழில்நுட்பம்
    பிரதமர் மோடியைச் சந்திக்கவிருக்கிறார் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன் சாட்ஜிபிடி

    சாட்ஜிபிடி

    சாட்ஜிபிடி இயங்க கட்டுப்பாடுகளை விதித்த இத்தாலி!  செயற்கை நுண்ணறிவு
    AI வசதியுடன் கூடிய புதிய தேடுபொறி.. என்ன செய்கிறது கூகுள்? கூகுள்
    "AI-யை நெறிமுறைப்படுத்துவது அவசியம்" - சுந்தர் பிச்சை!  செயற்கை நுண்ணறிவு
    ChatGPT-யை காலி செய்ய வரும் எலான் மஸ்க்கின் TruthGPT!  எலான் மஸ்க்

    தொழில்நுட்பம்

    Slack செயலி முடக்கம்: உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு இந்த மெசேஜிங் ஆப் முடங்கியது  தொழில்நுட்பம்
    ஜிமெயில் செயலியில் மொழிப்பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்திய கூகுள் கூகுள்
    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-விண்வெளி ஆராய்ச்சி விண்வெளி
    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி மருத்துவம்

    தொழில்நுட்பம்

    நீங்கள் அழுத்தும் key-இன் ஓசையை வைத்தே உங்கள் பாஸ்வேர்டைக் கண்டறியும் AI கருவிகள் செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவில் மேலும் 9 சூப்பர் கம்யூட்டர்களை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியா
    ஆபத்துக் காலங்களில் உதவும் செயற்கைக்கோள் வழி குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் கூகுள்
    இந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர் யுபிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025