NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி?
    போலி செயலிகள் பெயரில் பரப்பப்படும் மால்வேர்

    தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 31, 2023
    03:34 pm

    செய்தி முன்னோட்டம்

    டாகிரேட் (DogeRAT) என்ற மால்வேரானது தினமும் நாம் பயன்படுத்தும் செயலிகளின் போலி வடிவில் பரப்பப்படுவதாக பெங்களூருவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிளவுட்செக் கண்டறிந்திருக்கிறது.

    நெட்ஃபிலிக்ஸ், யூடியூப், இன்ஸ்டாகிராம், ஒபேரா மினி போன்ற செயலிகளின் போலி வடிவில் இந்த டாகிரேட் மால்வேரானது பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், போலி எனக் கண்டறிய முடியாத அளவிற்கு மிகவும் நம்பகத்தன்மையுடன் மேற்கூறிய போலி செயலிகள் இருப்பதாகவும் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது.

    இந்த போலி செயலிகளானது பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் லிங்க்குள் மூலமே பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகளவில் இந்த மால்வேரின் தாக்கம் இருந்தாலும், இந்திய இணையப் பயனர்கள் அதிகளவின் இந்த மால்வேரின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

    சைபர் பாதுகாப்பு

    என்ன பாதிப்பு.. பாதுகாப்பாக இருப்பது எப்படி? 

    இந்த மால்வேரானது பயனர்களின் சாதனத்தில் உள்ள குறுஞ்செய்திகள், தொடர்புகள், வங்கித் தகவல்கள் போன்ற முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி இதனை உருவாக்கியவர்களுக்கு அனுப்புகிறது.

    மேலும், நம்முடைய சாதனத்தை மோசடி நபர்கள் இயக்குவதற்கான அனுமதியை உருவாக்கி கொடுக்கிறது. இதனால், சைபர் குற்றவாளிகள் அவர்களது இருப்பிடத்தில் இருந்து நம்முடைய சாதனத்தை இயக்கி முக்கியமான தகவல்களை கைப்பற்ற முடியும்.

    தற்காத்துக் கொள்வது எப்படி?

    தெரியாத நபர்களிடமிருந்து சமூக வலைத்தளங்களிலோ அல்லது வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட குறுஞ்செய்தி செயலிகளிலோ வரும் லிங்க்குகளை கிளிக் செய்யாமல் இருந்தாலே பெரும்பாலும் இது போன்ற இணையத் தாக்குதல்களில இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

    அவ்வப்போது நமது சாதனத்தின் இயங்குதளத்தையும், பிற செயலிகளையும் அப்டேட் செய்து செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைபர் பாதுகாப்பு
    சைபர் கிரைம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சைபர் பாதுகாப்பு

    சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்! சமூக வலைத்தளம்

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025