Page Loader
நியூராலிங்க் பொருத்தப்பட்ட முதல் நோயாளி தனது கேமிங் திறன்களை அதிகரித்துள்ளதாக பூரிப்பு

நியூராலிங்க் பொருத்தப்பட்ட முதல் நோயாளி தனது கேமிங் திறன்களை அதிகரித்துள்ளதாக பூரிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 26, 2024
06:52 pm

செய்தி முன்னோட்டம்

நோலண்ட் அர்பாக் என்பவர் தான், எலான் மஸ்க்கின் நியூராலிங்கில் இருந்து மூளை-கணினி தொடர்பு கொண்ட சிப்பினை பொருத்திக்கொண்ட முதல் நபர். அவர் தனது கேமிங் திறன்களில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு டைவிங் விபத்தின் காரணமாக கைகால்களின் கட்டுப்பாட்டை இழந்த 29 வயது இளைஞன் நோலண்ட் அர்பாக், இப்போது கம்ப்யூட்டரின் கர்சரை மனதால் மட்டுமே கையாள முடியும். ஜோ ரோகன் என்பவரது போட்காஸ்டில் இந்த கேமிங் அனும்பவத்தை அர்பாக் பகிர்ந்துகொண்டார்.

போட்டி

நியூராலிங்க்-மேம்படுத்தப்பட்ட கேமர்களுக்கான தனித்தனி லீக்குகளை கணித்துள்ளது

அர்பாக்கின் கேமிங் திறன்கள், அதேபோன்ற நியுராலிங்க் பொருத்திகொண்ட வீரர்களுக்கு தனித்தனி லீக்குகள் தேவைப்படலாம் எனும் அளவிற்கு மேம்பட்டுள்ளன என்று அவர் நம்புகிறார். "அவர்கள் என்னைப் போன்றவர்களுக்கு வெவ்வேறு லீக்குகளை ஏற்பாடு செய்யலாம், ஏனெனில் இது நியாயமானது" என்று அவர் கூறினார். சாதனத்தின் வேகம் மற்றும் துல்லியம் இதற்குக் காரணம் என்று அவர் கூறுகிறார். அவரது மேம்பட்ட திறன்கள் இருந்தபோதிலும், கால் ஆஃப் டூட்டி போன்ற சில கேம்கள் தற்போது நியூராலிங்கிற்கு எட்டவில்லை என்று அர்பாக் ஒப்புக்கொள்கிறார். இருப்பினும், அவர் வெற்றிகரமாக மரியோ கார்ட் மற்றும் Civilization VI இல் விளையாடியுள்ளார் மற்றும் எதிர்காலத்தில் ஹாலோவை விளையாட விரும்புகிறார்.