NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / CCI விதித்த 1,337.76 கோடி அபராதம்: 10% செலுத்துமாறு, கூகுளுக்கு NCLAT அறிவுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    CCI விதித்த 1,337.76 கோடி அபராதம்: 10% செலுத்துமாறு, கூகுளுக்கு NCLAT அறிவுறுத்தல்
    கூகிள் நிறுவனத்திற்கு அபராதம்

    CCI விதித்த 1,337.76 கோடி அபராதம்: 10% செலுத்துமாறு, கூகுளுக்கு NCLAT அறிவுறுத்தல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 05, 2023
    05:50 pm

    செய்தி முன்னோட்டம்

    தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னோடியாக திகழும் கூகிள் நிறுவனத்திற்கு, சில மாதங்களுக்கு முன்னர்,CCI, ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது.

    இந்திய சந்தைகளில், கூகிள் தனது மேலாதிக்க நிலையை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது.

    அதை தொடர்ந்து, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) -இடம் மேல்முறையீடு செய்தது கூகிள்.

    மேல்முறையீட்டு மனுவை ஏற்ற இரு உறுப்பினர் கொண்ட பெஞ்ச், மற்ற தரப்பினரையும் விசாரித்த பின்னர், தீர்ப்பை வழங்குவதாக அறிவித்தனர்.

    எனினும், CCI -இன் அபராத உத்தரவிற்கு எதிராக, இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும், அபராத தொகையில் 10 சதவிகிதத்தை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

    தொடர்ந்து படிக்க

    கூகிள் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம்

    தீர்ப்பாயம் முன்பு வாதாடிய கூகிள் வழக்கறிஞர், இந்தத் தீர்ப்பு, இந்திய பயனர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும், கூகிள் சாதனங்களின் விலையில் இது பிரதிபலிக்கலாம் எனவும் கூறினார். CCI-இன் உத்தரவை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தினார்.

    "முறையான விசாரணை இல்லாமல், எந்த உத்தரவையும் நிறைவேற்ற முடியாது" என்று கூறிய NCLAT, கூகிளின் அவசரத்தை கண்டித்தது.

    அக்டோபர் 20 ஆம் தேதி, CCI ஆல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து முறையீடு செய்ய, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டது.

    அதை குறிப்பிட்ட நீதிபதிகள், "நீங்கள் மேல்முறையீடு செய்ய இரண்டு மாதங்கள் எடுத்தீர்கள். ஆனால், இரண்டு நிமிடங்களில் நாங்கள் ஒரு உத்தரவை வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்," என்று கடிந்து கொண்டனர்.

    வழக்கை பிப்ரவரி 13 ஆம் தேதி பட்டியலிட பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆண்ட்ராய்டு
    கூகிள் தேடல்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஆண்ட்ராய்டு

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    ஆண்ட்ராய்டு 13 - இப்போது பிளைட் மோடில் கூட வைஃபையை இயக்கலாம் ஆண்ட்ராய்டு 13
    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான ஆப்பிள் டிவி: விரைவில் எதிர்பார்க்கலாம் ஆப்பிள்
    இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை, வாட்ஸ்அப் தடை செய்துள்ளது வாட்ஸ்அப்

    கூகிள் தேடல்

    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! இந்தியா
    ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிய நபர்! பயனர் பாதுகாப்பு
    மருத்துவரின் புரியாத கையெழுத்தை புரிய வைக்க இதோ வந்துவிட்டது கூகிள் லென்ஸ் புதுப்பிப்பு
    விரைவில் இந்தியாவின் பிராந்திய மொழிகளில் வரப்போகிறது புதிய யூ ட்யூப் புதுப்பிப்பு

    இந்தியா

    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு திருப்பதி
    தொழில்முனைவில் முன்னணியில் இருக்கும் தமிழக பெண்கள்! தமிழ்நாடு
    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்தார்! மோடி
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025