Page Loader
அலுவலகம் வந்து பணிபுரிபவர்களே சிறப்பானவர்கள் - மார்க் ஜுக்கர்பெர்க் தகவல்!
மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் சிறந்த பணியாளர்களை அறிவித்துள்ளார்

அலுவலகம் வந்து பணிபுரிபவர்களே சிறப்பானவர்கள் - மார்க் ஜுக்கர்பெர்க் தகவல்!

எழுதியவர் Siranjeevi
Mar 16, 2023
02:33 pm

செய்தி முன்னோட்டம்

மெட்டா நிறுவனம் கடந்த மாதங்களுக்கு முன்பு 11 ஆயிரம் ஊழியர்களை அனுப்பிய பின், மீண்டும் 10,000 ஊழியர்களை நீக்கியது. இதுபற்றி தெரிவித்த, மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், தொழில்நுட்பக் குழுக்களில் மறுசீரமைப்பு மற்றும் பணிநீக்கங்கள் ஏப்ரல் பிற்பகுதியில் செய்யப்படும் என்றும், மே மாத இறுதியில் வணிகக் குழுக்கள் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், மார்க் ஜுக்கர்பெர்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், வீட்டில் இருந்து பணி செய்தவர்களை விட அலுவலகத்தில் இருந்து பணிபுரிந்த பொறியாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக குறிப்பிட்டார். அனுபவம் வாய்ந்த சக ஊழியர்களுடன் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் நேரில் பணியாற்றும் போது, ​​புதியவர்கள் சிறப்பாகக் கற்றுக்கொள்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மெட்டா நிறுவனம்

சிறப்பான பணியாளர்கள் இவர்கள் தான் - மெட்டா தலைவர் தகவல்

மேலும் ஊழியர்களுக்கு இது ஒரு சாதாரண மெயில் இல்லை, அவர்களின் இரண்டாவது கட்ட பணிநீக்கம் பற்றியும் அறிவித்துள்ளார். அலுவலகத்தில் சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களைப் பற்றிய ஜுக்கர்பெர்க்கின் அறிக்கை சற்று தெளிவற்றதாக இருக்கிறது., ஏனெனில் எல்லா ஊழியர்களும் ஒரே மாதிரியான பணி விருப்பங்களையும் சூழ்நிலைகளையும் கொண்டுள்ளனர் என்று கருதுகிறது. இதனால், ஜூக்கர்பெர்க், உறவுகளை உருவாக்குவதற்கும், வேலைகளைச் செய்வதற்கும் நேரில் அலுவலகமே முக்கியம் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டு நிறுவனத்திற்கு திறமையான ஆண்டாக இருக்கும் என்று கூறியிருந்தார். ஒன்று மெட்டாவை சிறந்த தொழில்நுட்ப நிறுவனமாக மாற்றுவது மற்றும் இரண்டாவது கடினமான சூழலில் எங்கள் நிதி செயல்திறனை மேம்படுத்துவது.