NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பதிவுகளை எழுத AI கருவி, புதிய வசதியை சோதனை செய்யும் LinkedIn
    அடுத்த செய்திக் கட்டுரை
    பதிவுகளை எழுத AI கருவி, புதிய வசதியை சோதனை செய்யும் LinkedIn
    புதிய AI வசதியை சோதனை செய்யும் லிங்க்டுஇன்

    பதிவுகளை எழுத AI கருவி, புதிய வசதியை சோதனை செய்யும் LinkedIn

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 27, 2023
    11:04 am

    செய்தி முன்னோட்டம்

    உலகின் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களுடைய சேவையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.

    தொழில் சார்ந்த சமூக வலைத்தள நிறுவனமான லிங்க்டுஇன்-னும் தங்களுடைய தளத்தில் AI வசதியுடன் கூடிய புதிய கருவிகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

    லிங்க்டுஇன் தளத்தில் பல துறைகளைச் சேர்ந்தவர்களும், தங்களுடைய அனுபவங்களை, கருத்துக்களை நீண்ட பதிவுகளாக பகிர்ந்து கொள்வது வழக்கம். எனவே, நீண்ட நெடிய பதிவுகளை எழுதுவதற்கு உதவக்கூடிய வகையில் AI கருவிகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம்.

    இது குறித்த பதிவொன்றை, அந்நிறுனத்தின் இயக்குநர்களுள் ஒருவரான கேரன் பாரூ, லிங்க்டுஇன் தளத்திலேயே பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், இந்த புதிய முயற்சி எத்தகையது, இது எப்படி லிங்க்டுஇன் பயனர்களுக்கு பயனளிக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார் அவர்.

    லிங்க்டுஇன்

    லிங்க்டுன் தளத்தில் புதிய AI கருவி: 

    அலுலவகத்திலோ அல்லது நமது தொழில் சார்ந்தோ நீண்ட பதிவொன்றை எழுத நாம் விரும்புவோம். ஆனால், அனைவருக்கும் தொடக்கத்திலேயே நீண்ட பதிவுகளை எழுதுவது என்பது எளிதான செயல் கிடையாது.

    எனவே, நாம் சொல்ல விரும்பும் விஷயத்தை சுருக்கமாக 30 வார்த்தைகளுக்குள் லிங்க்டுஇன் வழங்கும் AI கருவியில் உள்ளீடு செய்தால், நமக்கான பதிவை அந்த AI கருவியே உருவாக்கித் தருமாம்.

    இதனைத் தொடர்ந்து, அந்தப் பதிவில் நாம் மேற்கொள்ள விரும்பு மாற்றங்களைச் செய்து லிங்க்டுஇன் தளத்தில் பகிர்ந்து கொள்ள முடியும், எனத் தன்னுடைய லிங்க்டுஇன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் கேரன் பாரூ.

    முதற்கட்டமாக இந்த வசதியானது சோதனை செய்த பிறகு, லிங்க்டுஇன் பயனர்களுக்கு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    சமூக வலைத்தளம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    செயற்கை நுண்ணறிவு

    AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு!  உலகம்
    AI-க்களால் உருவாகும் ஆபத்து.. எச்சரிக்கிறார் AI தொழில்நுட்பத்தின் தந்தை! சாட்ஜிபிடி
    தங்கள் ஊழியர்கள் AI கருவிகளைப் பயன்படுத்த தடை விதித்தது சாம்சங்!  சாம்சங்
    ப்ளக்இன் மூலம் சாட்ஜிபிடியில் ரியல் எஸ்டேட் சேவை வழங்கும் அமெரிக்க நிறுவனம்! சாட்ஜிபிடி

    சமூக வலைத்தளம்

    வாடகை வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க முடியாததால் நூதன விளம்பரம் - வைரலாகும் போஸ்டர் கர்நாடகா
    சென்னையில் இணையதளத்தை பயன்படுத்தி ஸ்டாம்ப் போதை பொருள் விற்பனை - 4 பேர் கைது சென்னை
    விதவைகளுக்கு திருமணம் செய்து வைப்பேன் - வைரலாகும் 5ம் வகுப்பு மாணவன் வைரல் செய்தி
    கன்னியாகுமரியில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் பெனடிக்ட் கைது கன்னியாகுமரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025