NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / அதிகரித்து வரும் கால் ஃபார்வர்டிங் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிகரித்து வரும் கால் ஃபார்வர்டிங் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி?
    அதிகரித்து வரும் கால் ஃபார்வர்டிங் மோசடி

    அதிகரித்து வரும் கால் ஃபார்வர்டிங் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 27, 2023
    05:04 pm

    செய்தி முன்னோட்டம்

    தினம் தினம் புதுப்புது தொழில்நுட்ப யுக்திகளோடு, நம்முடைய தகவல்களைத் திருட முயன்று வருகிறார்கள் ஆன்லைன் மோசடி நபர்கள். அவர்களது யுக்திகளைப் பற்றி அவ்வப்போது தெரிந்து கொண்டு அவற்றிலிருந்து நம்முடைய தகவல்களைப் பாதுகாப்பது எப்படி என்பதனையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    தற்போது புதிய வகை கால் ஃபார்வர்டிங் (Call Forwarding) மோசடி ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகிறது. வழக்கம் போல இந்த மோசடியும் குறிப்பிட்ட நபர்களின் OTP மற்றும் வங்கித் தகவல்களைத் தெரிந்து கொண்டு அவற்றின் மூலம் பணத்தைத் திருடுவது தான்.

    இந்த மோசடியில் ஈடுபவர்கள், குறிப்பிட்ட எண்களுக்கு அழைத்து, வங்கி அல்லது தொலைத் தொடர்பு நிறுவனத்திலிருந்து பேசுவது போல் பேசுவார்கள்.

    ஆன்லைன் மோசடி

    கால் ஃபார்வர்டிங் மோசடி: 

    நம்முடைய நம்பிக்கையைப் பெற பல்வேறு தகவல்களைக் கூறுவார்கள். பின்னர் நம்முடைய வங்கிக் கணக்கிலோ அல்லது இன்னபிற சேவைகளிலோ, சிறிய பிரச்சினை இருப்பதாகக் கூறி குறிப்பிட்ட எண்ணை அழைத்தால் சரியாகிவிடும் எனக் கூறுவார்கள்.

    நாமும் அவர்களை கூறுவதை நம்பி, அவர்கள் குறிப்பிட்ட எண்ணிற்கு அழைத்தால் போதும். நம்முடைய மொபைல் எண்ணுக்கு வரும் அழைப்புகள் மோசடி நபர்களின் எண்ணிற்கு ஃபார்வர்டு ஆகத் தொடங்கிவிடும்.

    அதாவது உங்கள் எண்ணுக்கு யார் அழைத்தாலும், அது உங்களுக்கு வராது, மோசடி நபருக்குத் தான் செல்லும். இதனைப் பயன்படுத்தி வாய்ஸ் OTP-க்களை வைத்து அவர்களால் நம்முடைய பணத்தை திருடவும் வாய்ப்பிருக்கிறது.

    மோசடி

    தற்காத்துக் கொள்வது எப்படி? 

    இந்த வகையான மோசடி மட்டுமின்றி எந்த வகையான மோசடியாக இருந்தாலும் சில அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினாலே போதும், இவற்றில் சிக்காமல் நம்மையும் நம்முடைய தகவல்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    தெரியாத எண்களில் இருந்து அழைத்து ஏதாவது செய்யச் சொன்னாலோ அல்லது குறிப்பிட்ட தகவல்களைக் கேட்டாலோ, எதையும் செய்யக்கூடாது, தகவல்களைக் கொடுக்கக் கூடாது.

    நம்முடைய மொபைல் போனுக்கு, பாஸ்வேர்டு போட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒருவேளை நம்முடைய மொபைல் தொலைந்தாலும், மோசடி நபர்களால் அதிலிருக்கும் தகவல்களைக் கைப்பற்ற முடியாது.

    முக்கியமாக OTP-க்களை யார் கேட்டாலும் அளிக்கக்கூடாது. ஏனெனில் எந்தவொரு நிறுவனமும், நபரும், நம்முடைய OTP-யைக் கேட்க மாட்டார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் மோசடி
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ஜம்மு காஷ்மீர்
    'சக்தி' புயல்: அந்தமான் கடலில் சூறாவளி சுழற்சி நிலவுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை
    இணையத்தில் உலவும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் இளம் தலைமுறையை உளவியல் ரீதியாக பாதிக்கின்றன: ஆய்வு இந்தியா
    CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சிபிஎஸ்இ

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்

    தொழில்நுட்பம்

    இந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர் யுபிஐ
    ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை, ரூ.1 கோடி சம்பளம் கூகுள்
    உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள் அறிவியல்
    வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ் செயற்கை நுண்ணறிவு

    தொழில்நுட்பம்

    புதிய ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தவிருக்கும் நத்திங்கின் துணை பிராண்டான CMF கேட்ஜட்ஸ்
    இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள் இந்தியா
    AI தொழில்நுட்பத்துடன் கூடிய தேடுபொறி வசதியை இந்தியாவிற்கும் விரிவுபடுத்திய கூகுள் கூகுள்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025