NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இனி பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது 'DigiLocker' கணக்கு வைத்திருப்பதும் அவசியம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இனி பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது 'DigiLocker' கணக்கு வைத்திருப்பதும் அவசியம்
    இனி பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது 'DigiLocker' கணக்கு வைத்திருப்பதும் அவசியம்

    இனி பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது 'DigiLocker' கணக்கு வைத்திருப்பதும் அவசியம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 17, 2023
    04:09 pm

    செய்தி முன்னோட்டம்

    இனி இந்தியாவில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் அரசின் டிஜிலாக்கர் (Digilocker) செயிலியிலும் கணக்கைத் தொடங்கியிருக்க வேண்டும் என்பதைக் காட்டயமாக்கியிருக்கிறது மத்திய அரசு. சர்வதேச பயணங்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்ப விதிமுறையில் இது முக்கியமான மாற்றமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    டிஜிலாக்கர் என்பது, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் செயலியாகும்.

    இந்தச் செயலியில் ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட மத்திய அரசு ஆவணங்கள் முதல், கல்வி சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம் வரை அனைத்து விதமான ஆவணங்களையும் அரசுத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள முடியும்.

    தேவைப்படும் போது, இந்த செயலியில் இருந்தே நேரடியாக நம்முடைய ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் வகையில், இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

    பாஸ்போர்ட்

    பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு எதற்கு டிஜிலாக்கர் செயலி: 

    பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது, குறிப்பிட்ட அரசு ஆவணங்களை நாம் வழங்க வேண்டியிருக்கும். இனி அப்படி வழங்க வேண்டியிருக்கும் ஆவணங்களை டிஜிலாக்கர் செயலியில் தரவிறக்கம் செய்து, பின்னர் அதன் மூலம் இணையவழி பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டிருப்பதுடன், டிஜிலாக்கர் வழி ஆவணங்களை அளிப்பவர்கள், பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் எந்த நடைமுறையின் போது கையில் தங்களுடைய ஆவணங்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை எனத் தெரிவித்திருக்கிறது வெளியுறவுத் துறை அமைச்சகம்.

    இந்தப் புதிய நடைமுறையின் மூலம், ஒட்டுமொத்த பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையும் துரிதமாவதுடன், மிகவும் எளிமையான செயல்முறையாகவும் மாற்றப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 38 பேருக்கு பாதிப்பு கொரோனா
    சட்டம் பேசுவோம்: புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள் மக்களவை
    நேரு டிராபி படகுப்போட்டியில் நான்காவது முறையாக வீயபுரம் சுண்டனில் அணி வெற்றி கேரளா
    77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பசுமைப் புரட்சி விவசாயிகள்

    மத்திய அரசு

    ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையேயான ரயில்வே திட்டத்தினை கைவிட கோரும் தமிழக அரசு ராமேஸ்வரம்
    'ஓபன்ஹைய்மர்' திரைப்படத்தில் வரும் பகவத் கீதை காட்சிகளால் பரபரப்பு  ஹாலிவுட்
    மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்  நாடாளுமன்றம்
    EPF-க்கான வட்டி வகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது மத்திய அரசு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025