NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஹேக்கர்களுக்கு உதவி செய்யும் சாட்ஜிபிடி: கேள்விக்குறியாகும் Ai தொழில்நுட்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹேக்கர்களுக்கு உதவி செய்யும் சாட்ஜிபிடி: கேள்விக்குறியாகும் Ai தொழில்நுட்பம்
    ஹேக்கர்களுக்கு வரப்ரசாதமாய் மாறிய சாட்ஜிபிடி

    ஹேக்கர்களுக்கு உதவி செய்யும் சாட்ஜிபிடி: கேள்விக்குறியாகும் Ai தொழில்நுட்பம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 09, 2023
    06:06 pm

    செய்தி முன்னோட்டம்

    ஓபன் எஐ (Open AI) துணை கொண்டு உருவாக்கப்பட்ட, சாட்போட் கருவியான, சாட் ஜிபிடி, அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.

    சில நாட்களுக்கு முன்னர், நியூயார்க் நகர பள்ளிகள் கூட்டமைப்பு, மாணவர் நலன் கருதி, இந்த சாட்போட் பயன்பாட்டை தடை செய்தனர்.

    இப்போது, இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமான Check Point இன் புதிய அறிக்கையின்படி, ஹேக்கர்கள், இந்த பாட்டின் உதவியுடன், ஹேக்கிங் குறியீடு மற்றும் தீம்பொருளை எழுத பயன்படுத்தப்படலாம்.

    சைபர் கிரைமினல்கள், ஹேக்கர்கள், இந்த ChatGPT ஐப் பயன்படுத்தி சக்திவாய்ந்த ஹேக்கிங் கருவிகளை உருவாக்கி, இளம் பெண்களைப் பிரதிபலிக்கும் வகையில், புதிய சாட்போட்களை உருவாக்குகின்றனர் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    சாட்ஜிபிடி

    சாட்ஜிபிடி மோசடியாளர்களின் கருவியா?

    இதன் குறியீடு உருவாக்கும் திறன், ஹேக்கர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் உள்ளது.

    சைபர் தாக்குதல்களைத் தொடங்க, ransomware ஐ உருவாக்க எளிதாக உதவும் என மற்றொரு அறிக்கை குறிப்பிடுகிறது.

    மறுபுறம், அலெக்ஸ் ஹோல்டன் என்ற பாதுகாப்பு வல்லுநர், டேட்டிங் மோசடி செய்பவர்கள், சாட்ஜிபிடியை பயன்படுத்தி, போலியான நபர்களை உருவாக்குவதை தாம் கண்டதாக கூறினார்.

    மோசடி செய்பவர்கள், அவர்களின் இலக்குகளுடன் நீண்ட உரையாடல்களை நடத்தவும், பெண்களை போல ஆள்மாறாட்டம் செய்ய நபர்களை உருவாக்குகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

    மோசடி செய்பவர்கள், ChatGPT ஐப் பயன்படுத்தி, அதிக இலக்கு கொண்ட சமூக பொறியியல் மோசடிகள் மற்றும் ஃபிஷிங் பிரச்சாரங்கள் தொடங்கப்படலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

    இந்த பாதுகாப்பு அறிக்கைகளுக்கு, OpenAI இன்னும் அதிகாரபூர்வ பதிலளிக்கவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    தொழில்நுட்பம்

    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! இந்தியா
    நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள்
    800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா இந்தியா
    தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர் இந்தியா

    தொழில்நுட்பம்

    Spotify பிரீமியம் சந்தா இப்போது 2 ரூபாய்க்கு கிடைக்கிறது, ஆனால்...?! தொழில்நுட்பம்
    ஐபோனில் 5G: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் 5G
    ஆண்டுதோறும் பிரமாண்ட வளர்ச்சி காணும் IT துறையில், பெண்களின் வளர்ச்சி என்ன? தொழில்நுட்பம்
    ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிய நபர்! பயனர் பாதுகாப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025