NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்க புதிய திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் தொலைதொடர்புத் துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்க புதிய திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் தொலைதொடர்புத் துறை
    சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்க புதிய திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் தொலைதொடர்புத் துறை

    சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்க புதிய திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் தொலைதொடர்புத் துறை

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 07, 2023
    04:44 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் சிம் கார்டுகளை வைத்து நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்கும் விதமாக மொபைல் பயனாளர்களுக்கு பிரத்தியேக வாடிக்கையாளர் ஐடிக்களை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது தொலைத்தொடர்புத் துறை.

    ஒரு மொபைல் பயனாளருக்கு வழங்கப்படும் வடிக்கையாளர் ஐடியானது அவரது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். மேலும், அவர் வாங்கும் சிம் கார்டுகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அந்த வாடிக்கையாளர் ஐடியிலேயே சேமிக்கப்படும்.

    ஒரு சிம் கார்டை யாருக்காக வாங்குகிறார்கள், எத்தனை சிம் கார்டுகளை அவர் வாங்கியிருக்கிறார் என்பது குறித்த பல்வேறு தகவல்களையும் வாடிக்கையாளர் ஐடியைக் கொண்ட தேவைப்படும் நேரத்தில் அதிகாரிகள் தெரிந்து கொள்ள முடியும்.

    இந்தியா

    64 லட்சம் சிம் இணைப்புகள் துண்டிப்பு: 

    கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் மோசடி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட 64 லட்சம் மொபைல் இணைப்புகளை துண்டித்திருக்கிறது தொலைதொடர்புத் துறை.

    இந்தியாவில் ஒரு நபர் அதிகபட்சமாக ஒன்பது சிம் கார்டுகளை மட்டுமே வாங்க முடியும். ஆனால், ஒன்பது சிம் கார்டுகளுக்கு மேலாக வாங்கும் நபர்களைக் கண்டறியவோ, தடுக்கவோ அரசிடம் தற்போது எந்த வழிமுறைகளும் இல்லை.

    முக அடையாளம் கண்டறியும் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியுடனேயே கூடுதலான சிம் கார்டுகளைக் கொண்டிருப்பவர்களைக் கண்டறிய முடிகிறது.

    மொத்தத்தில் இந்தியாவில் வாங்கப்படும் ஒவ்வொரு சிம் கார்டையும் யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆவணப்படுத்தவே இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது தொலைதொடர்புத் துறை டிசம்பர் 1ம் தேதி இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு மு.க ஸ்டாலின்
    அமெரிக்காவில் 24 வயது இந்திய மாணவருக்கு கத்தி குத்து  அமெரிக்கா
    இந்தியாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா
    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி

    மத்திய அரசு

    மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால் விஷால்
    குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம் குன்னூர்
    பரபரப்பு வீடியோ: கடன் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமனிடம் மேடையில் ஏறி முறையிட்ட நபர்  கோவை
    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பள்ளி நலக்குழு - மத்திய பள்ளி கல்வித்துறை அறிவிப்பு நீட் தேர்வு

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள் இந்தியா
    AI தொழில்நுட்பத்துடன் கூடிய தேடுபொறி வசதியை இந்தியாவிற்கும் விரிவுபடுத்திய கூகுள் கூகுள்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Google-க்கு வயது 25, பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்த கதை! கூகுள்

    தொழில்நுட்பம்

    தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்கள் பரவுவது அதிகரிக்குமா? செயற்கை நுண்ணறிவு
    விண்வெளியைத் தொடர்ந்து ஆழ்கடலை ஆய்வு செய்ய சமுத்திரயான் திட்டத்திற்கு தயாராகும் இந்தியா இந்தியா
    தகவல் திருட்டுக்கு வாய்ப்பு, அனைத்து செயலிகள் மற்றும் மென்பொருட்களை அப்டேட் செய்ய வலியுறுத்தல் தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய சுவையை உருவாக்கிய கோகோ கோலா செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025