தடைசெய்யப்பட்ட நோட்டுகளை வெளிநாட்டு மக்கள் மாற்றமுடியாது! PIB தகவல்
கடந்த 2017ஆம் ஆண்டில் மத்திய அரசு 500 மற்றும் 1000 நோட்டுகளை சொல்லாது எனவும், புதிய 500 மற்றும் 2000 நோட்டுகளை வெளியிட்டு இருந்தது. இந்த புதிய நோட்டுகளை பெற, வங்கிகளில் பழைய நாணயங்களை கொடுத்து மாற்றப்பட்டன. 7 ஆண்டுகள் நிறவடைந்ததை தொடர்ந்து, இன்றும் வெளிநாட்டுக் குடிமக்கள் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த தகவல் போலியானது எனவும், வெளிநாட்டு குடிமக்களுக்கான இந்திய பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நாணயத் தாள்களை மாற்றும் வசதி 2017 இல் முடிவடைந்து, அதன் பின்னர் மீண்டும் தொடங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்று, https://factcheck.pib.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை சரி பார்க்கலாம். அல்லது, +918799711259 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிந்துகொள்ளலாம்.